இது நான் எழுதியதல்ல.

எனக்கு இரண்டு தம்பிகள் உள்ளார்கள். அவர்களுக்கு எழுதும் பழக்கமெல்லாம் எனக்குத் தெரிந்து கிடையாது. திடீரென்று இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு பிடிஎஃப் கோப்பு எனக்கு மிகுந்த வியப்பளித்தது.

என்னுடைய இரண்டாவது தம்பி ஜகந்நாதன் அதனை அனுப்பியிருந்தான். தனது அலுவலக நண்பர்களுக்கு அனுப்பிய கடிதம் என்று குறிப்பிட்டிருந்தான். முதல் முறையாகத் தமிழில். கூகுள் டிரான்ஸ்லிட்ரேஷனில் இதனை முயற்சி செய்ததாகவும் தெரிவித்திருந்தான்.

ஃபேஸ்புக்குக்குப் புதிதாக நுழைந்த தனது முதல் நாள் அனுபவத்தை அவன் எழுதியிருந்த விதம், அவனுக்குள் ஓர் எழுத்தாளன் இருப்பதை எனக்குச் சொன்னது. தூண்டிவிட்டோ, ஊக்குவித்தோ உருப்படுகிற ஜாதியில்லை. எனவே நான் ஏதும் சொல்லப் போவதில்லை. என்றாவது அவனுக்கே அது தோன்றும். அன்று ஒரு நல்ல ரைட்டர் பிறப்பான்.

அவன் அனுப்பிய பிடிஎஃப் கோப்பு கீழே இருக்கிறது. நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.

Facebook anubhavangal

read more

How to Name it?

இன்றைய தினம்,  என் வாழ்வின் பெருமகிழ்ச்சியான நாள்களுள் ஒன்று.  பல வருடக் கனவான எலக்டிரானிக் கீ போர்ட் ஒன்றை [Casio CTK 2200] இன்று வாங்கினேன். பேசிக்குக்குப் பக்கத்து வீட்டு மாடல்தான். ஆனாலுமென்ன. நான் கடையனிலும் கடையன். எனக்கு இது போதும்.

read more

The Real Salute

The Real Salute என்னும் குறும்படத்தின் லிங்க்கை அதன் இயக்குநர் ஷக்தி எனக்கு அனுப்பியிருந்தார். ஒரு குறும்படத்தின் நோக்கமும் வெளிப்பாடும் எப்படி அமையவேண்டும் என்பதை மிகச் சரியாகக் காட்டுகிற படமாக இது இருக்கிறது. வெறும் மூன்றரை நிமிடப் படம்தான். ஆனால் ஓடி முடித்ததும் உருவாகிற உணர்வெழுச்சி வெகுநேரம் மனத்தைவிட்டு நீங்காதிருக்கிறது.

தேச பக்தி என்பதும் கொடியின்மீதான மரியாதை என்பதும் காலிகளாலும் போலி அறிவுஜீவிகளாலும் களவாடப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் இம்மாதிரியான முயற்சி கண்டிப்பாகப் பாராட்டப்படவேண்டியது.

இயக்குநருக்கு வாழ்த்துகள்.

படத்தைப் பார்க்க: http://www.youtube.com/watch?v=Dxv9CwCpJFo

read more

உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக

வாசக நண்பர்களுக்குத் தமிழ் புத்தாண்டு தின அட்வான்ஸ் வாழ்த்துகள். நாளை மதியம் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் சிறப்புத் திரைப்படமாக நான் வசனம் எழுதிய தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஒளிபரப்பாகிறது. Ofcourse, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. கரண், அஞ்சலி, பாலா சிங், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் நடித்திருக்கிறார்கள். பாடல்கள் வைரமுத்து, இசை வித்யாசாகர். இயக்கம் வி.சி. வடிவுடையான்.

இப்படம் வெளியானபோது பார்க்க நினைத்துப் பார்க்க முடியாதவர்கள், வாழ்த்த நினைத்து மறந்துபோனவர்கள், திட்ட நினைத்துத் தவறவிட்டவர்கள் அத்தனை பேருக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

நாளை மறக்காமல் பார்த்துவிடுங்கள். ஜெயா டிவி, மதியம் 1.30.

read more

ரைட்டர்தமிழ்பாராபேப்பர்டாட்நெட்காம்

சில தொழில்நுட்பக் காரணங்களால் இன்று இத்தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தளம் இயங்காது போயிருந்தால்கூடப் பரவாயில்லை. தமிழ்பேப்பர் தளத்துக்குப் போக முயற்சி செய்தவர்களுக்கு உரல் இங்கே ஃபார்வட் ஆகியிருக்கிறது.

இயங்காத இத்தளத்துக்கு அந்தத் தளத்தின் உரல் எப்படி அழைத்துச் செல்கிறது, ஏன் அழைத்துச் செல்கிறது என்று கேட்டு காலை முதல் ஏகப்பட்ட விசாரிப்புகள்.

ரைட்டர்பாராடாட்காம், தமிழ்பேப்பர்டாட்நெட் இரண்டு தளங்களும் இதுநாள் வரை ஒரே இடத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்தன. என்னுடைய ரைட்டர்பாரா தளத்தை இப்போது வேறு சர்வருக்கு மாற்றியிருக்கிறேன். இந்த இடப்பெயர்ச்சியில் நேர்ந்த ஒரு சிறு குளறுபடியினால் அப்படியானது என்று தள நிர்வாகி கணேஷ் சந்திரா தெரிவித்தார்.

இந்தப் பிரச்னை இப்போது சரியாகிவிட்டபடியால்தான் இதனை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

read more

மீள்வணக்கம்

நண்பர்களுக்கு வணக்கம். கொஞ்சகாலமாக இந்தப் பக்கம் வர இயலாமல் போனதற்கு என் பணியின் தன்மை காரணம். நேரத்தைத் துரத்தவேண்டிய நிர்ப்பந்தம். இணையத்திலிருந்துதான் விலகியிருந்தேனே தவிர, எழுத்திலிருந்தல்ல. இனி அவ்வப்போது வர இயலும் என்று நினைக்கிறேன். அதே வேலைப்பளுதான்; ஆயினும் இனி சற்றே ஒழுங்கு கடைப்பிடிக்க முடியுமென்று நினைக்கிறேன். பழகிவிட்டால் சிரமமானவை எல்லாம்கூட  சிரமமென்பது மறந்துவிடுகிறது.

read more

குற்றியலுலகத்தின் முகம்

அன்புள்ள பாரா,

நான்கு பக்கத்தில் சொல்ல வேண்டியதை நாலு வரியில் சொல்கிறவன்தான் சிறந்த எழுத்தாளன் என்பது போல் நாற்பது வண்ணங்களை வைத்து விலாவரியாக வரைய வேண்டிய ஓவியத்தை நாலு கோடுபோட்டு கிறுக்கிச் சொல்பவன்தான் சிறந்த ஓவியம் என்பேன். முகம் என்ற தலைப்பிலான பேயோனின் ஓவியத்தைப் பார்த்தவுடன் அப்படித்தான் தோன்றியது. அதைப் பார்த்து “அட” என்று வியந்தவர்களில் நானும் ஒருவன். பேயோன் சாதாரண ஆளல்ல. அவர் ஒரு அறிவு ஜீவி என்று மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்கும் போது தோன்றியது.

உங்கள் குற்றியலுகரம் புத்தகம் பேயோனின் ஓவியத்தை அட்டையில் தாங்கி வந்ததைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. உங்களின் ரத்தினச் சுருக்க ட்விட்டர் இலக்கிய (சரி.. சரி.. கமர்ஷியல்தான்) புத்தகத்திற்கு இதைவிட பொருத்தமான அட்டை அமையாது.

புத்தகம் வெற்றிபெற வாழ்த்துகள். பாம்புத்தைலத்தோடு சேர்ந்து நிச்சயம் வாங்கிவிடுகிறேன்.

அன்புடன்
சித்ரன்

அன்புள்ள சித்ரன்

பாம்புத்தைலம் ஆழியில் உள்ளது. என்னுடையது மதி நிலையத்தில்.  அட்டைப்படத்துக்கே இத்தனை வரிகள் செலவிட்டவர், படித்தபிறகு என்ன செய்வீர்கள் என்று எண்ணிப்பார்த்து கதி கலங்குகிறேன் :-)

பாரா/

read more