<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பா. ராகவன்</title>
	<atom:link href="http://www.writerpara.com/paper/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.writerpara.com/paper</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 05 May 2012 17:05:05 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=</generator>
		<item>
		<title>இது நான் எழுதியதல்ல.</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=2782</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=2782#comments</comments>
		<pubDate>Sat, 05 May 2012 17:05:05 +0000</pubDate>
		<dc:creator>writerpara</dc:creator>
				<category><![CDATA[வலையுலகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=2782</guid>
		<description><![CDATA[எனக்கு இரண்டு தம்பிகள் உள்ளார்கள். அவர்களுக்கு எழுதும் பழக்கமெல்லாம் எனக்குத் தெரிந்து கிடையாது. திடீரென்று இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு பிடிஎஃப் கோப்பு எனக்கு மிகுந்த வியப்பளித்தது. என்னுடைய இரண்டாவது தம்பி ஜகந்நாதன் அதனை அனுப்பியிருந்தான். தனது அலுவலக நண்பர்களுக்கு அனுப்பிய கடிதம் என்று குறிப்பிட்டிருந்தான். முதல் முறையாகத் தமிழில். கூகுள் டிரான்ஸ்லிட்ரேஷனில் இதனை முயற்சி செய்ததாகவும் தெரிவித்திருந்தான். ஃபேஸ்புக்குக்குப் புதிதாக நுழைந்த தனது முதல் நாள் அனுபவத்தை அவன் எழுதியிருந்த விதம், அவனுக்குள் ஓர் எழுத்தாளன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எனக்கு இரண்டு தம்பிகள் உள்ளார்கள். அவர்களுக்கு எழுதும் பழக்கமெல்லாம் எனக்குத் தெரிந்து கிடையாது. திடீரென்று இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு பிடிஎஃப் கோப்பு எனக்கு மிகுந்த வியப்பளித்தது.</p>
<p>என்னுடைய இரண்டாவது தம்பி ஜகந்நாதன் அதனை அனுப்பியிருந்தான். தனது அலுவலக நண்பர்களுக்கு அனுப்பிய கடிதம் என்று குறிப்பிட்டிருந்தான். முதல் முறையாகத் தமிழில். கூகுள் டிரான்ஸ்லிட்ரேஷனில் இதனை முயற்சி செய்ததாகவும் தெரிவித்திருந்தான்.</p>
<p>ஃபேஸ்புக்குக்குப் புதிதாக நுழைந்த தனது முதல் நாள் அனுபவத்தை அவன் எழுதியிருந்த விதம், அவனுக்குள் ஓர் எழுத்தாளன் இருப்பதை எனக்குச் சொன்னது. தூண்டிவிட்டோ, ஊக்குவித்தோ உருப்படுகிற ஜாதியில்லை. எனவே நான் ஏதும் சொல்லப் போவதில்லை. என்றாவது அவனுக்கே அது தோன்றும். அன்று ஒரு நல்ல ரைட்டர் பிறப்பான்.</p>
<p>அவன் அனுப்பிய பிடிஎஃப் கோப்பு கீழே இருக்கிறது. நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.</p>
<p><a href="http://www.writerpara.com/paper/wp-content/uploads/2012/05/Facebook-anubhavangal.pdf">Facebook anubhavangal</a></p>
<hr /><small>Copyright &copy; 2008-2011 Pa Raghavan .<br /> This feed is for personal, non-commercial use only. <br /> The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.<br /> )</small><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.writerpara.com%2Fpaper%2F%3Fp%3D2782&amp;title=%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2." id="wpa2a_4">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&#038;p=2782</wfw:commentRss>
		<slash:comments>17</slash:comments>
		</item>
		<item>
		<title>How to Name it?</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=2778</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=2778#comments</comments>
		<pubDate>Mon, 30 Apr 2012 15:34:26 +0000</pubDate>
		<dc:creator>writerpara</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=2778</guid>
		<description><![CDATA[இன்றைய தினம்,  என் வாழ்வின் பெருமகிழ்ச்சியான நாள்களுள் ஒன்று.  பல வருடக் கனவான எலக்டிரானிக் கீ போர்ட் ஒன்றை [Casio CTK 2200] இன்று வாங்கினேன். பேசிக்குக்குப் பக்கத்து வீட்டு மாடல்தான். ஆனாலுமென்ன. நான் கடையனிலும் கடையன். எனக்கு இது போதும். பல வருடங்களுக்கு முன்னர் முதல் முதலில் புல்லாங்குழல் கற்றுக்கொண்டு வாசிக்கத் தொடங்கினேன். பிறகு வீணைக்கு மாறி ஏழு எட்டு வருடங்கள் அதனோடு போனது. எங்காவது ஹார்மோனியம் கண்ணில் பட்டால் தப்புத் தப்பாக வாசித்துப் பார்ப்பேன். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இன்றைய தினம்,  என் வாழ்வின் பெருமகிழ்ச்சியான நாள்களுள் ஒன்று.  பல வருடக் கனவான எலக்டிரானிக் கீ போர்ட் ஒன்றை [Casio CTK 2200] இன்று வாங்கினேன். பேசிக்குக்குப் பக்கத்து வீட்டு மாடல்தான். ஆனாலுமென்ன. நான் கடையனிலும் கடையன். எனக்கு இது போதும்.<span id="more-2778"></span></p>
<p><a href="http://www.writerpara.com/paper/wp-content/uploads/2012/04/IMG_0145.jpg"><img class="alignleft size-medium wp-image-2779" title="IMG_0145" src="http://www.writerpara.com/paper/wp-content/uploads/2012/04/IMG_0145-300x225.jpg" alt="" width="300" height="225" /></a>பல வருடங்களுக்கு முன்னர் முதல் முதலில் புல்லாங்குழல் கற்றுக்கொண்டு வாசிக்கத் தொடங்கினேன். பிறகு வீணைக்கு மாறி ஏழு எட்டு வருடங்கள் அதனோடு போனது. எங்காவது ஹார்மோனியம் கண்ணில் பட்டால் தப்புத் தப்பாக வாசித்துப் பார்ப்பேன். நூற்றுக்கணக்கான தப்புகளுக்குப் பிறகு கொஞ்சம்போல் அதன் சூட்சுமம் பிடிபட்டது. ஒரு ஹார்மோனியம் வாங்கவேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டேன். முடியாமலே போய்விட்டது.</p>
<p>பிறகு கிடார்மீது காதல் ஏற்பட்டது. என் சகோதரி வீட்டில் இரண்டு கிடார்கள் இருந்தன. யாரோ நண்பர் குடிமாறிச் சென்றபோது கொடுத்துவிட்டுச் சென்ற கிடார்கள். ஒன்று பாஸ் கிடார். இன்னொன்று லீட். பாஸை எடுத்து வந்து சுதி கூட்டி வாசித்துப் பார்க்க ஆரம்பித்தேன். தந்திக் கருவிகள் அனைத்துக்கும் அடிப்படை ஒன்றுதான் என்பது என் தீர்மானம். கிடாரில் கமக சூட்சுமம்தான் பிடிபடவில்லையே தவிர எளிய கிடார் பாடல்களை சுலபமாகவே வாசிக்க முடிந்தது. இன்று காலை கூட பனி விழும் மலர்வனம் வாசித்துப் பார்த்தேன். கேட்கும்படியாகத்தான் இருந்தது.</p>
<p>ஆனால் ஒரு கீ போர்டுக்கான எனது ஏக்கம் தீருவதாக இல்லை. குறிப்பாக, ட்விட்டரில் அறிமுகமான நண்பர் கார்த்திக்குடன் (@karthiktn) பழகத் தொடங்கிய பிறகு, அவர்மூலம் அறிமுகமான ஏராளமான மேற்கத்திய இசை மேதைகளின் படைப்புகளைக் கேட்க ஆரம்பித்த பிறகு கை சும்மா இருக்கமாட்டேனென்கிறது. சற்று ஓய்வு கிடைத்தாலும் கேட்டதை வாசித்துப் பார்க்கச் சொல்லி உள்ளுக்குள் ஒரு குண்டூசி குத்திக்கொண்டே இருந்தது.</p>
<p>இதெல்லாம் எதற்கு என்ற எண்ணம் எழாமலிருப்பதில்லை. மற்றதெல்லாம் மட்டும் எதற்கு என்ற பதில் வினாவும் கையோடு வந்துவிடுகிறது. இசை என்பது போதையல்ல. போதம். தொடக்கம் முதலே அது வெறும் பொழுதுபோக்கல்ல என்ற தீர்மானமான எண்ணமுடன் வளர்ந்தவன் என்பதால் ஒவ்வொரு கருவி சித்திக்கும்போதும் பரவசமாகிவிடுகிறது.</p>
<p>ஒரு முழுநேர இசைக்கலைஞனாகவேண்டும் என்று மிகச் சிறு வயதுகளில் ஆசைப்பட்டிருக்கிறேன். புத்தி தெளிந்தபோது எனக்கு அத்தகுதி இல்லை என்று உணர்ந்தேன். என் மொழி இசையல்ல; எழுத்து என்று கண்டு தேர்ந்தேன். இருப்பினும் செகண்ட் லேங்குவேஜாக இதுவும் இன்றுவரை கூடவே வந்துகொண்டுதான் இருக்கிறது.</p>
<p>ஒரு நாளில் சுமார் பதினெட்டு, பத்தொன்பது மணி நேரங்கள் எழுதும் வேலையில் இருப்பவன் நான். கீ போர்டை வாசித்துப் பார்க்க எங்கே நேரமிருக்கும் என்ற சந்தேகம் என் மனைவிக்கு இருக்குமென்று நினைக்கிறேன். ஆயினும் என் எந்த விருப்பத்துக்கும் தடை போடாத அவளது சுபாவம்தான் என்னை இப்படியெல்லாம் எண்ணியபடி வாழவைக்கிறது.</p>
<p>கடந்த அரை மணிநேரமாக என் புதிய கேஸியோ கீ போர்டில் ஹவ் டு நேம் இட்டில் இருந்து ஒரு பகுதியைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். அக்கம்பக்கத்தாரிடமிருந்து இன்னும் புகாரேதும் வரவில்லை என்பதால் வாசிப்பு நன்றாக இருப்பதாகவே நினைத்துக்கொள்கிறேன்.</p>
<p>மனித வாழ்க்கை அற்ப சந்தோஷங்களால் ஆனது. என் சந்தோஷம், இது.</p>
<hr /><small>Copyright &copy; 2008-2011 Pa Raghavan .<br /> This feed is for personal, non-commercial use only. <br /> The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.<br /> )</small><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.writerpara.com%2Fpaper%2F%3Fp%3D2778&amp;title=How%20to%20Name%20it%3F" id="wpa2a_8">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&#038;p=2778</wfw:commentRss>
		<slash:comments>13</slash:comments>
		</item>
		<item>
		<title>The Real Salute</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=2767</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=2767#comments</comments>
		<pubDate>Mon, 16 Apr 2012 03:32:51 +0000</pubDate>
		<dc:creator>writerpara</dc:creator>
				<category><![CDATA[குறும்படம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=2767</guid>
		<description><![CDATA[The Real Salute என்னும் குறும்படத்தின் லிங்க்கை அதன் இயக்குநர் ஷக்தி எனக்கு அனுப்பியிருந்தார். ஒரு குறும்படத்தின் நோக்கமும் வெளிப்பாடும் எப்படி அமையவேண்டும் என்பதை மிகச் சரியாகக் காட்டுகிற படமாக இது இருக்கிறது. வெறும் மூன்றரை நிமிடப் படம்தான். ஆனால் ஓடி முடித்ததும் உருவாகிற உணர்வெழுச்சி வெகுநேரம் மனத்தைவிட்டு நீங்காதிருக்கிறது. தேச பக்தி என்பதும் கொடியின்மீதான மரியாதை என்பதும் காலிகளாலும் போலி அறிவுஜீவிகளாலும் களவாடப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் இம்மாதிரியான முயற்சி கண்டிப்பாகப் பாராட்டப்படவேண்டியது. இயக்குநருக்கு வாழ்த்துகள். படத்தைப் பார்க்க: [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>The Real Salute என்னும் குறும்படத்தின் லிங்க்கை அதன் இயக்குநர் ஷக்தி எனக்கு அனுப்பியிருந்தார். ஒரு குறும்படத்தின் நோக்கமும் வெளிப்பாடும் எப்படி அமையவேண்டும் என்பதை மிகச் சரியாகக் காட்டுகிற படமாக இது இருக்கிறது. வெறும் மூன்றரை நிமிடப் படம்தான். ஆனால் ஓடி முடித்ததும் உருவாகிற உணர்வெழுச்சி வெகுநேரம் மனத்தைவிட்டு நீங்காதிருக்கிறது.</p>
<p>தேச பக்தி என்பதும் கொடியின்மீதான மரியாதை என்பதும் காலிகளாலும் போலி அறிவுஜீவிகளாலும் களவாடப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் இம்மாதிரியான முயற்சி கண்டிப்பாகப் பாராட்டப்படவேண்டியது.</p>
<p>இயக்குநருக்கு வாழ்த்துகள்.</p>
<p>படத்தைப் பார்க்க: http://www.youtube.com/watch?v=Dxv9CwCpJFo</p>
<hr /><small>Copyright &copy; 2008-2011 Pa Raghavan .<br /> This feed is for personal, non-commercial use only. <br /> The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.<br /> )</small><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.writerpara.com%2Fpaper%2F%3Fp%3D2767&amp;title=The%20Real%20Salute" id="wpa2a_12">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&#038;p=2767</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=2764</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=2764#comments</comments>
		<pubDate>Thu, 12 Apr 2012 01:59:28 +0000</pubDate>
		<dc:creator>writerpara</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=2764</guid>
		<description><![CDATA[வாசக நண்பர்களுக்குத் தமிழ் புத்தாண்டு தின அட்வான்ஸ் வாழ்த்துகள். நாளை மதியம் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் சிறப்புத் திரைப்படமாக நான் வசனம் எழுதிய தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஒளிபரப்பாகிறது. Ofcourse, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. கரண், அஞ்சலி, பாலா சிங், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் நடித்திருக்கிறார்கள். பாடல்கள் வைரமுத்து, இசை வித்யாசாகர். இயக்கம் வி.சி. வடிவுடையான். இப்படம் வெளியானபோது பார்க்க நினைத்துப் பார்க்க முடியாதவர்கள், வாழ்த்த நினைத்து மறந்துபோனவர்கள், திட்ட நினைத்துத் தவறவிட்டவர்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வாசக நண்பர்களுக்குத் தமிழ் புத்தாண்டு தின அட்வான்ஸ் வாழ்த்துகள். நாளை மதியம் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் சிறப்புத் திரைப்படமாக நான் வசனம் எழுதிய தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஒளிபரப்பாகிறது. Ofcourse, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. கரண், அஞ்சலி, பாலா சிங், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் நடித்திருக்கிறார்கள். பாடல்கள் வைரமுத்து, இசை வித்யாசாகர். இயக்கம் வி.சி. வடிவுடையான்.</p>
<p>இப்படம் வெளியானபோது பார்க்க நினைத்துப் பார்க்க முடியாதவர்கள், வாழ்த்த நினைத்து மறந்துபோனவர்கள், திட்ட நினைத்துத் தவறவிட்டவர்கள் அத்தனை பேருக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.</p>
<p>நாளை மறக்காமல் பார்த்துவிடுங்கள். ஜெயா டிவி, மதியம் 1.30.</p>
<hr /><small>Copyright &copy; 2008-2011 Pa Raghavan .<br /> This feed is for personal, non-commercial use only. <br /> The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.<br /> )</small><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.writerpara.com%2Fpaper%2F%3Fp%3D2764&amp;title=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95" id="wpa2a_16">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&#038;p=2764</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>ரைட்டர்தமிழ்பாராபேப்பர்டாட்நெட்காம்</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=2761</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=2761#comments</comments>
		<pubDate>Tue, 10 Apr 2012 15:44:01 +0000</pubDate>
		<dc:creator>writerpara</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=2761</guid>
		<description><![CDATA[சில தொழில்நுட்பக் காரணங்களால் இன்று இத்தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தளம் இயங்காது போயிருந்தால்கூடப் பரவாயில்லை. தமிழ்பேப்பர் தளத்துக்குப் போக முயற்சி செய்தவர்களுக்கு உரல் இங்கே ஃபார்வட் ஆகியிருக்கிறது. இயங்காத இத்தளத்துக்கு அந்தத் தளத்தின் உரல் எப்படி அழைத்துச் செல்கிறது, ஏன் அழைத்துச் செல்கிறது என்று கேட்டு காலை முதல் ஏகப்பட்ட விசாரிப்புகள். ரைட்டர்பாராடாட்காம், தமிழ்பேப்பர்டாட்நெட் இரண்டு தளங்களும் இதுநாள் வரை ஒரே இடத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்தன. என்னுடைய ரைட்டர்பாரா தளத்தை இப்போது வேறு சர்வருக்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சில தொழில்நுட்பக் காரணங்களால் இன்று இத்தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தளம் இயங்காது போயிருந்தால்கூடப் பரவாயில்லை. தமிழ்பேப்பர் தளத்துக்குப் போக முயற்சி செய்தவர்களுக்கு உரல் இங்கே ஃபார்வட் ஆகியிருக்கிறது.</p>
<p>இயங்காத இத்தளத்துக்கு அந்தத் தளத்தின் உரல் எப்படி அழைத்துச் செல்கிறது, ஏன் அழைத்துச் செல்கிறது என்று கேட்டு காலை முதல் ஏகப்பட்ட விசாரிப்புகள்.</p>
<p>ரைட்டர்பாராடாட்காம், தமிழ்பேப்பர்டாட்நெட் இரண்டு தளங்களும் இதுநாள் வரை ஒரே இடத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்தன. என்னுடைய ரைட்டர்பாரா தளத்தை இப்போது வேறு சர்வருக்கு மாற்றியிருக்கிறேன். இந்த இடப்பெயர்ச்சியில் நேர்ந்த ஒரு சிறு குளறுபடியினால் அப்படியானது என்று தள நிர்வாகி கணேஷ் சந்திரா தெரிவித்தார்.</p>
<p>இந்தப் பிரச்னை இப்போது சரியாகிவிட்டபடியால்தான் இதனை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.</p>
<hr /><small>Copyright &copy; 2008-2011 Pa Raghavan .<br /> This feed is for personal, non-commercial use only. <br /> The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.<br /> )</small><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.writerpara.com%2Fpaper%2F%3Fp%3D2761&amp;title=%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_20">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&#038;p=2761</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>மீள்வணக்கம்</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=2755</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=2755#comments</comments>
		<pubDate>Fri, 06 Apr 2012 05:19:24 +0000</pubDate>
		<dc:creator>writerpara</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=2755</guid>
		<description><![CDATA[நண்பர்களுக்கு வணக்கம். கொஞ்சகாலமாக இந்தப் பக்கம் வர இயலாமல் போனதற்கு என் பணியின் தன்மை காரணம். நேரத்தைத் துரத்தவேண்டிய நிர்ப்பந்தம். இணையத்திலிருந்துதான் விலகியிருந்தேனே தவிர, எழுத்திலிருந்தல்ல. இனி அவ்வப்போது வர இயலும் என்று நினைக்கிறேன். அதே வேலைப்பளுதான்; ஆயினும் இனி சற்றே ஒழுங்கு கடைப்பிடிக்க முடியுமென்று நினைக்கிறேன். பழகிவிட்டால் சிரமமானவை எல்லாம்கூட  சிரமமென்பது மறந்துவிடுகிறது. ஒரு தமாஷ். இங்கே நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தளம் படு சுத்தமாக இருந்தது. ஓர் இடைவெளிக்குப் பிறகு இப்போது நிர்வாகப் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நண்பர்களுக்கு வணக்கம். கொஞ்சகாலமாக இந்தப் பக்கம் வர இயலாமல் போனதற்கு என் பணியின் தன்மை காரணம். நேரத்தைத் துரத்தவேண்டிய நிர்ப்பந்தம். இணையத்திலிருந்துதான் விலகியிருந்தேனே தவிர, எழுத்திலிருந்தல்ல. இனி அவ்வப்போது வர இயலும் என்று நினைக்கிறேன். அதே வேலைப்பளுதான்; ஆயினும் இனி சற்றே ஒழுங்கு கடைப்பிடிக்க முடியுமென்று நினைக்கிறேன். பழகிவிட்டால் சிரமமானவை எல்லாம்கூட  சிரமமென்பது மறந்துவிடுகிறது.<span id="more-2755"></span></p>
<p>ஒரு தமாஷ். இங்கே நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தளம் படு சுத்தமாக இருந்தது. ஓர் இடைவெளிக்குப் பிறகு இப்போது நிர்வாகப் பக்கத்துக்குச் சென்று பார்த்தால் எண்பதுக்கும் மேற்பட்ட ஸ்பாம் கமெண்ட்டுகள். பயன்பாடற்ற இடத்தில் பலான செயல்பாடென்பது மெய்யுலகில் மட்டுமல்ல; மெய்நிகருலகிலும்கூட என்பதை அறிந்தேன்.</p>
<p>இடைப்பட்ட காலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் திரும்பத் திரும்ப இரண்டு வினாக்கள் இடம்பெற்றவாறே இருந்தன. முதலாவது, என்னுடைய புத்தகங்கள் குறித்து. இன்னொரு பதிப்பக முயற்சி உண்டா என்பது குறித்து. இரண்டாவது வினா, தமிழ் பேப்பர் போல் ஓர் இணைய இதழை மீண்டும் ஏன் தொடங்கக்கூடாது என்பது குறித்து.</p>
<p>இரண்டு வினாக்களுக்குமே ஒரே பதில்தான். நான் தயாராகக் கொஞ்சம் அவகாசம் வேண்டியிருந்தது. இப்போது பதில் சொல்லுகிறேன்.</p>
<p>என்னுடைய ஐம்பது புத்தகங்களில் சுமார் நாற்பது இன்று அச்சில் இல்லை. அவை அனைத்தையும் விரைவில் மறு பதிப்பு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன். ஓரிரு மாதங்களில் அவை வெளிவரத் தொடங்கிவிடும். ஆனால் சொந்தப் பதிப்பகம் தொடங்குமளவு எனக்குத் திறன் கிடையாது. என்னால் என்ன முடியும் என்பதைக் காட்டிலும் எது முடியாது என்பதை மிகத் தெளிவாக அறிவேன். சென்னை புத்தகக் கண்காட்சி சமயம் என்னுடைய பெரும்பாலான புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று சொன்ன நண்பர்கள் அத்தனை பேருக்கும் இதைத்தான் சொன்னேன். வாசக சகாயமான விலையில், தரமான தயாரிப்பில், எப்போதும் பிரதி கிடைக்கக்கூடிய சாத்தியங்களுடன் என்னுடைய நூல்களைக் கொண்டு வரும் முயற்சியில் கிட்டத்தட்ட செயல்படு காண்டத்தின் அருகே வந்துவிட்டேன். மிக விரைவில் பதிப்பு நிறுவனம் குறித்த விவரங்களைத் தருகிறேன்.</p>
<p>இது தொடர்பாகப் பல்வேறு பதிப்பாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த நாள்களில் அவர்கள் திரும்பத் திரும்ப என்னிடம் கேட்ட ஒரு விஷயம் &#8211; தங்களுக்குப் புதிய எழுத்தாளர்களை ஏன் அறிமுகப்படுத்தக்கூடாது என்பது.</p>
<p>கடந்த ஏழாண்டுகளில் கதையல்லாத, அறிவுத்துறைகள் சார்ந்த புத்தகங்கள் எழுதக்கூடிய சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்ய வாய்த்தது. எனது பணி மாற்றம் அல்லது துறை மாற்றம் இந்தச் செயல்பாட்டுக்கு இடையே ஒரு தேக்கத்தை உண்டாக்கியது. மீண்டும் அதனைச் செய்வதென்றால் அதற்கென ஒரு தனித்தளம் இல்லாமல் முடியாது. மருத்துவத் துறை போல, வழக்கறிஞர் துறை போல எழுத்தும் வாழ்நாள் முழுதும் நீளும் ஒரு ப்ராக்டிஸ்தான். ஆர்வமுள்ள புதிய எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிப்பது கடினமான பணி. ஆனால் தனிப்பட்ட முறையில் அது என் எழுத்துக்கு மேலும் மேலும் வலு சேர்க்கிற ஒரு செயல்பாடும்கூட. பரஸ்பர லாபம். தமிழ் பேப்பர் எடிட் செய்துகொண்டிருந்தபோது இதை மிகத் தெளிவாக அறிந்தேன்.</p>
<p>மீண்டும் அதனைத் தொடர்வதென்றால் இன்னொரு தளத்தை உருவாக்கித்தான் செய்யவேண்டியிருக்கிறது. எனவே, அதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் ஒரு புதிய மின் இதழைத் தொடங்க உத்தேசித்திருக்கிறேன். புதிய எழுத்தாளர்களின் பயிற்சித் தளமாக இது அமையும். அவர்கள் படித்துப் பயில உறுதுணையாக, தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலர் இதில் தொடர்ந்து எழுதவிருக்கிறார்கள்.</p>
<p>இந்தப் புதிய தளத்தில் அறிமுகமாகிற எழுத்தாளர்களுக்குப் புத்தக எழுத்துப் பயிற்சி &#8211; அவர்கள் விருப்பப்பட்டால் தனியே தருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இங்கு அறிமுகமாகிறவர்களுக்கான பிரசுர சாத்தியங்களும் ஒழுங்கான ராயல்டியும் விரிவான விளம்பர நடவடிக்கைகளும் கட்டாயம் உண்டு என்பது உள்ளுறை சங்கதி.</p>
<p>ஆனால் மீண்டும் சொல்கிறேன். நிறுவனம் எனதல்ல. நான் அதன் ஊழியனுமல்லன். ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கும் அக்கறை மிக்க பதிப்பாளருக்கும் இடையே நான் தொடங்கவிருக்கும் இம்மின்னிதழ் ஒரு பாலமாயிருக்கும். அவ்வளவே.</p>
<p>விரைவில் மேலும் விவரங்கள் வரும். தமிழ்ப் புத்தாண்டு முதல் சில புதிய சந்தோஷங்கள் சித்திக்கும்.</p>
<p>பிகு: இதனை வாசிக்கும் நண்பர்கள் இத்தகவலை சாத்தியமுள்ள அனைத்துத் தளங்களிலும்<br />
பரப்ப வேண்டுகிறேன். முன்போல் இணையத்தில் அதிகநேரம் என்னால் இருக்க முடியாததாலும் ட்விட்டர் தவிர வேறெங்கும் நான் செயல்படாததாலும் இதனைச் சொல்லவேண்டியிருக்கிறது. நல்லவற்றை ஊரறிய உரக்கச் சொல்வது ராமானுஜர் ஸ்டைல். இவ்விஷயத்தில் அதனைக் கடைப்பிடிப்போருக்கு எம்பெருமானார் திருவருள் சித்திக்கும் <img src='http://www.writerpara.com/paper/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';-)' class='wp-smiley' /> </p>
<hr /><small>Copyright &copy; 2008-2011 Pa Raghavan .<br /> This feed is for personal, non-commercial use only. <br /> The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.<br /> )</small><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.writerpara.com%2Fpaper%2F%3Fp%3D2755&amp;title=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_24">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&#038;p=2755</wfw:commentRss>
		<slash:comments>15</slash:comments>
		</item>
		<item>
		<title>குற்றியலுலகத்தின் முகம்</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=2747</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=2747#comments</comments>
		<pubDate>Sun, 15 Jan 2012 10:57:24 +0000</pubDate>
		<dc:creator>writerpara</dc:creator>
				<category><![CDATA[கடிதம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=2747</guid>
		<description><![CDATA[அன்புள்ள பாரா, நான்கு பக்கத்தில் சொல்ல வேண்டியதை நாலு வரியில் சொல்கிறவன்தான் சிறந்த எழுத்தாளன் என்பது போல் நாற்பது வண்ணங்களை வைத்து விலாவரியாக வரைய வேண்டிய ஓவியத்தை நாலு கோடுபோட்டு கிறுக்கிச் சொல்பவன்தான் சிறந்த ஓவியம் என்பேன். முகம் என்ற தலைப்பிலான பேயோனின் ஓவியத்தைப் பார்த்தவுடன் அப்படித்தான் தோன்றியது. அதைப் பார்த்து “அட” என்று வியந்தவர்களில் நானும் ஒருவன். பேயோன் சாதாரண ஆளல்ல. அவர் ஒரு அறிவு ஜீவி என்று மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்கும் போது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #000000;"><span><span style="font-family: trebuchet ms,sans-serif;">அன்புள்ள பாரா,</p>
<p>நான்கு பக்கத்தில் சொல்ல வேண்டியதை நாலு வரியில் சொல்கிறவன்தான் சிறந்த எழுத்தாளன் என்பது போல் நாற்பது வண்ணங்களை வைத்து விலாவரியாக வரைய வேண்டிய ஓவியத்தை நாலு கோடுபோட்டு கிறுக்கிச் சொல்பவன்தான் சிறந்த ஓவியம் என்பேன். முகம் என்ற தலைப்பிலான பேயோனின் ஓவியத்தைப் பார்த்தவுடன் அப்படித்தான் தோன்றியது. அதைப் பார்த்து “அட” என்று வியந்தவர்களில் நானும் ஒருவன். பேயோன் சாதாரண ஆளல்ல. அவர் ஒரு அறிவு ஜீவி என்று மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்கும் போது தோன்றியது.</p>
<p>உங்கள் குற்றியலுகரம் புத்தகம் பேயோனின் ஓவியத்தை அட்டையில் தாங்கி வந்ததைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. உங்களின் ரத்தினச் சுருக்க ட்விட்டர் இலக்கிய (சரி.. சரி.. கமர்ஷியல்தான்) புத்தகத்திற்கு இதைவிட பொருத்தமான அட்டை அமையாது.</p>
<p>புத்தகம் வெற்றிபெற வாழ்த்துகள். பாம்புத்தைலத்தோடு சேர்ந்து நிச்சயம் வாங்கிவிடுகிறேன்.<br />
<br clear="all" /></span></span></span>அன்புடன்<br />
சித்ரன்</p>
<p>&#8211;</p>
<p>அன்புள்ள சித்ரன்</p>
<p>பாம்புத்தைலம் ஆழியில் உள்ளது. என்னுடையது மதி நிலையத்தில்.  அட்டைப்படத்துக்கே இத்தனை வரிகள் செலவிட்டவர், படித்தபிறகு என்ன செய்வீர்கள் என்று எண்ணிப்பார்த்து கதி கலங்குகிறேன் <img src='http://www.writerpara.com/paper/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>பாரா/</p>
<hr /><small>Copyright &copy; 2008-2011 Pa Raghavan .<br /> This feed is for personal, non-commercial use only. <br /> The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.<br /> )</small><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.writerpara.com%2Fpaper%2F%3Fp%3D2747&amp;title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_28">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&#038;p=2747</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>எனக்காக மட்டும்</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=2742</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=2742#comments</comments>
		<pubDate>Sat, 14 Jan 2012 17:44:04 +0000</pubDate>
		<dc:creator>writerpara</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=2742</guid>
		<description><![CDATA[அவர் அப்போதுதான் சிம்பொனி முடித்து, திரும்பி வந்திருந்தார். அடையாறு பார்க் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. சிம்பொனி கிம்பொனியெல்லாம் எனக்குப் பிரமாதமில்லை. ராஜாவைப் பார்க்க ஒரு தருணம். போதும். புறப்பட்டுவிட்டேன். ஆனால் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று வினோதமாக இருந்தது. ராஜாவின் மொழி, அவர் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பதைச் சரியாக வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லை. அவராக விளக்கிச் சொன்னாலொழிய மற்றவர்களுக்குப் புரியும் சாத்தியமும் இல்லை. அவரும் பல நிமிடங்கள் விதவிதமாக என்னென்னவோ சொல்லி, தனது இசைக்கோலத்தை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அவர் அப்போதுதான் சிம்பொனி முடித்து, திரும்பி வந்திருந்தார். அடையாறு பார்க் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. சிம்பொனி கிம்பொனியெல்லாம் எனக்குப் பிரமாதமில்லை. ராஜாவைப் பார்க்க ஒரு தருணம். போதும். புறப்பட்டுவிட்டேன்.</p>
<p>ஆனால் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று வினோதமாக இருந்தது. ராஜாவின் மொழி, அவர் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பதைச் சரியாக வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லை. அவராக விளக்கிச் சொன்னாலொழிய மற்றவர்களுக்குப் புரியும் சாத்தியமும் இல்லை.<span id="more-2742"></span></p>
<p><a href="http://www.writerpara.com/paper/wp-content/uploads/2012/01/IMG_0022.jpg"><img class="alignleft size-medium wp-image-2743" title="IMG_0022" src="http://www.writerpara.com/paper/wp-content/uploads/2012/01/IMG_0022-225x300.jpg" alt="" width="225" height="300" /></a>அவரும் பல நிமிடங்கள் விதவிதமாக என்னென்னவோ சொல்லி, தனது இசைக்கோலத்தை விளக்கப் பார்த்தார். ம்ஹும். ராயல் ஃபில்ஹார்மனிக் கலைஞர்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டு, அவர்கள் எப்படியெல்லாம் பாராட்டினார்கள் என்று சொன்னார். ம்ஹும்.</p>
<p>நம்ம ஆள் ஏதோ பெரிதாகச் செய்திருக்கிறார் என்கிற ஒருவரிக்குமேல் யாருக்குமே எதுவும் ஏறவில்லை. எதையோ தீவிரமாக விளக்க முயற்சி செய்து முழுதும் தோற்று, இறுதியில் அவர் கைகூப்பிவிட்டார். எல்லோரும் சாப்பிடப் போய்விட்டார்கள். ராஜா மேடையை விட்டு நகருமுன் ‘சார் ஒரு நிமிடம்’ என்றேன். நின்றார்.</p>
<p>ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்றேன். அதுதான் அவ்வளவு எடுத்தாகிவிட்டதே என்றார்.</p>
<p>இல்லை, இது எனக்கே எனக்காக என்றேன். அவருக்குப் புரியவில்லை. சிரித்தார். சிரித்த கணத்தில் புகைப்படக்காரர் எடுத்துவிட்டார். உண்மையில் என் அற்ப சந்தோஷங்களில் ஒன்றாக இன்றளவும் இது இருக்கிறது. இந்தப் படம் என்னைத் தவிர உலகில் வேறு யாரிடமும் கிடையாது. ஒரே ப்ரிண்ட். போட்ட ப்ரிண்ட்டை லேமினேட் செய்து வைத்துவிட்டேன். தீர்ந்தது.</p>
<p>என் வீட்டில் நான் இரண்டு பேரின் புகைப்படங்களை மட்டும்தான் என் எழுதும் மேசைக்கு அருகே வைத்திருக்கிறேன். ஒன்று பாரதி. இன்னொன்று ராஜா. கவிதையில் அவன் செய்ததை இசையில் இவன் செய்திருக்கிறான் என்ற எண்ணம் இன்றுவரை மாறாமல் அப்படியே இருக்கிறது.</p>
<p>கடந்த வாரம் நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்குப் போகவேண்டும் என்று பலமாக திட்டமிட்டு டிக்கெட்டெல்லாம் வாங்கியும் போகமுடியாமல் ஆகிவிட்டது. நாளை ஜெயா டிவியில் பார்த்துதான் தீர்த்துக்கொள்ளப் போகிறேன்.</p>
<p>இன்று பார்த்த முன்னோட்ட நிகழ்ச்சி, என் மகிழ்ச்சியை வெகுவாகக் கிளறிவிட்டபடியால் இந்தக் குறிப்பை எழுதி, இதுவரை உலகம் பார்க்காத இளையராஜாவின் இந்தப் புகைப்படத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கலாம் என்று தோன்றியது.</p>
<p>இனி, இது உங்களுக்கும்.</p>
<p>பின்குறிப்பு: அன்று என்னுடன் வந்த புகைப்படக்காரர், இன்று பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கும் கோபிநாத்.</p>
<hr /><small>Copyright &copy; 2008-2011 Pa Raghavan .<br /> This feed is for personal, non-commercial use only. <br /> The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.<br /> )</small><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.writerpara.com%2Fpaper%2F%3Fp%3D2742&amp;title=%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_32">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&#038;p=2742</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
		</item>
		<item>
		<title>அதிமுக்கிய அறிவிப்பு</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=2737</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=2737#comments</comments>
		<pubDate>Fri, 06 Jan 2012 13:51:54 +0000</pubDate>
		<dc:creator>writerpara</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=2737</guid>
		<description><![CDATA[என்னுடைய புதிய புத்தகம் ‘குற்றியலுலகம்’ இன்று அச்சாகி வந்துவிட்டது. சென்னை புத்தகக் கண்காட்சியில் மதி நிலையம் அரங்கில் (இடப்புறமிருந்து முதல் வரிசை &#8211; கடை எண் 18-19) இது விற்பனைக்குக் கிடைக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான் ட்விட்டரில் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த ட்வீட்களை இதில் தொகுத்திருக்கிறேன். இனி இது ஒரு மாதத்தில் ஒன்பது லட்சம் பிரதிகள் விற்க வேண்டிய பொறுப்பு வாசகர்களாகிய உங்களைச் சேர்ந்தது. இந்நூலின் தனிச்சிறப்பு என்பது, தமிழன் வாங்கக்கூடிய சகாய விலையில் இது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.writerpara.com/paper/wp-content/uploads/2012/01/IMG_0009.jpg"><img class="alignleft size-medium wp-image-2738" title="IMG_0009" src="http://www.writerpara.com/paper/wp-content/uploads/2012/01/IMG_0009-225x300.jpg" alt="" width="225" height="300" /></a>என்னுடைய புதிய புத்தகம் ‘குற்றியலுலகம்’ இன்று அச்சாகி வந்துவிட்டது. சென்னை புத்தகக் கண்காட்சியில் மதி நிலையம் அரங்கில் (இடப்புறமிருந்து முதல் வரிசை &#8211; கடை எண் 18-19) இது விற்பனைக்குக் கிடைக்கிறது.</p>
<p>கடந்த நான்கு ஆண்டுகளில் நான் ட்விட்டரில் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த ட்வீட்களை இதில் தொகுத்திருக்கிறேன். இனி இது ஒரு மாதத்தில் ஒன்பது லட்சம் பிரதிகள் விற்க வேண்டிய பொறுப்பு வாசகர்களாகிய உங்களைச் சேர்ந்தது.</p>
<p>இந்நூலின் தனிச்சிறப்பு என்பது, தமிழன் வாங்கக்கூடிய சகாய விலையில் இது வெளிவந்திருப்பது. (ரூ. 40) வாசிக்கவும் நன்றாக இருக்கும் என்பது இரண்டாம் தனிச்சிறப்பு என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதில் அரசியல், கலை, இலக்கியம், சமூகம், சரித்திரம், சாப்பாடு, சங்கீதம், சினிமா, தொலைக்காட்சி, விளையாட்டு, சாராயம் உள்ளிட்ட சகலவிதமான நூதனாதி விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே இத்தனை பல்வேறுதரப்பட்ட சங்கதிகளை ஒரே நூலில் விவாதிப்பதென்பது இதுவே முதல் முறை என்பது வாசகப் பெருமக்களுக்குத் தெரியும் என்பதால் அது குறித்துப் பெரிதாகப் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை.</p>
<p>மேற்கண்ட புகைப்படத்தில், குற்றியலுலகம் நூல் வெளியாகிவிட்ட தகவலை எடுத்துக்காட்டி அறிவிப்பவர், என் நண்பர் பார்த்தசாரதி.</p>
<p>நாளை கண்காட்சிக்குச் செல்ல உத்தேசிக்கிறேன் என்பது உபரித் தகவல்.</p>
<hr /><small>Copyright &copy; 2008-2011 Pa Raghavan .<br /> This feed is for personal, non-commercial use only. <br /> The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.<br /> )</small><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.writerpara.com%2Fpaper%2F%3Fp%3D2737&amp;title=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" id="wpa2a_36">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&#038;p=2737</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
		</item>
		<item>
		<title>சயந்தனின் ஆறா வடு வெளியீட்டு விழா</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=2734</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=2734#comments</comments>
		<pubDate>Sat, 31 Dec 2011 05:16:44 +0000</pubDate>
		<dc:creator>writerpara</dc:creator>
				<category><![CDATA[புத்தகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=2734</guid>
		<description><![CDATA[தமிழினி வெளியீடாக, சயந்தனின் ஆறாவடு நாவல் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளிவருகிறது. கன்னிமரா நூலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் இதன் வெளியீட்டு விழா 3.1.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.30க்கு நடைபெறுகிறது. ராஜேந்திர சோழன் தலைமையில் விருபா குமரேசன் நூலை வெளியிட, சோமிதரன் முதல் பிரதி பெற்று உரையாற்றுகிறார். புத்தாண்டைப் புத்தக நிகழ்ச்சியுடன் தொடங்குவதே மங்களகரமானது. Copyright &#169; 2008-2011 Pa Raghavan . This feed is for personal, non-commercial use only. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழினி வெளியீடாக, <a href="http://sayanthan.com/">சயந்தனின்</a> ஆறாவடு நாவல் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளிவருகிறது. கன்னிமரா நூலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் இதன் வெளியீட்டு விழா 3.1.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.30க்கு நடைபெறுகிறது.</p>
<p>ராஜேந்திர சோழன் தலைமையில் விருபா குமரேசன் நூலை வெளியிட, சோமிதரன் முதல் பிரதி பெற்று உரையாற்றுகிறார்.</p>
<p>புத்தாண்டைப் புத்தக நிகழ்ச்சியுடன் தொடங்குவதே மங்களகரமானது.</p>
<hr /><small>Copyright &copy; 2008-2011 Pa Raghavan .<br /> This feed is for personal, non-commercial use only. <br /> The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.<br /> )</small><p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fwww.writerpara.com%2Fpaper%2F%3Fp%3D2734&amp;title=%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE" id="wpa2a_40">Share/Bookmark</a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&#038;p=2734</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
	</channel>
</rss>

<!-- Performance optimized by W3 Total Cache. Learn more: http://www.w3-edge.com/wordpress-plugins/

Page Caching using disk: basic

Served from: www.writerpara.com @ 2012-05-18 04:36:30 -->
