<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பா. ராகவன்</title>
	<atom:link href="http://www.writerpara.com/paper/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.writerpara.com/paper</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 02 Sep 2010 00:07:30 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=abc</generator>
		<item>
		<title>நீரில் மிதக்கும் தேசம்</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=1507</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=1507#comments</comments>
		<pubDate>Tue, 31 Aug 2010 11:03:29 +0000</pubDate>
		<dc:creator>para</dc:creator>
				<category><![CDATA[சூரியக்கதிர் பத்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=1507</guid>
		<description><![CDATA[நிகழும் விக்ருதி வருஷம் ஆவணி மாதம் சுக்லபட்சம் நாளது தேதி வரைக்கும் இந்தப் பூவுலகில் நிகழ்ந்த மாபெரும் இயற்கைப் பேரழிவுகளில் ஒரு நாலஞ்சாவது நமக்கு உடனே உடனே நினைவுக்கு வரக்கூடியவை. ஒண்ணுமே தோன்றாவிட்டாலும் பல்ராம் நாயுடுவை நினைவுகூர்ந்து, அந்த சுனாமியைச் சட்டுபுட்டெனச் சொல்லிவிடுவோம். கொஞ்சம் யோசித்து குஜராத் பூகம்பம் என்போம். பரந்த அல்லது பறந்த அனுபவஸ்தர்கள் அமெரிக்க மண்ணிலே, சப்பானிய யென்னிலே, கலிங்க, காந்தார, சாவக, கடார தேசங்களிலே எவ்வெப்போது என்னென்ன அழிவுகள் நேர்ந்திருக்கின்றன என்று உட்கார்ந்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நிகழும் விக்ருதி வருஷம் ஆவணி மாதம் சுக்லபட்சம் நாளது தேதி வரைக்கும் இந்தப் பூவுலகில் நிகழ்ந்த மாபெரும் இயற்கைப் பேரழிவுகளில் ஒரு நாலஞ்சாவது நமக்கு உடனே உடனே நினைவுக்கு வரக்கூடியவை. ஒண்ணுமே தோன்றாவிட்டாலும் பல்ராம் நாயுடுவை நினைவுகூர்ந்து, அந்த சுனாமியைச் சட்டுபுட்டெனச் சொல்லிவிடுவோம். கொஞ்சம் யோசித்து குஜராத் பூகம்பம் என்போம். பரந்த அல்லது பறந்த அனுபவஸ்தர்கள் அமெரிக்க மண்ணிலே, சப்பானிய யென்னிலே, கலிங்க, காந்தார, சாவக, கடார தேசங்களிலே எவ்வெப்போது என்னென்ன அழிவுகள் நேர்ந்திருக்கின்றன என்று உட்கார்ந்து யோசித்து அல்லது கூகுளாண்டவரைச் சரணடைந்து ஒரு பட்டியல் தயாரித்தளிக்கலாம்.</p>
<p>ஒன்று தெரியுமா? உலக சரித்திரம் அல்லது பூகோளம் இதற்குமுன் காணாத மகத்தான இயற்கைப் பேரழிவு என்பது சமீபத்தில் பாகிஸ்தானில் நிகழ்ந்ததுதான்.</p>
<p>பாகிஸ்தானிலா? என்ன நடந்தது? என்று கேள்விகளால் வேள்வி செய்வதற்கு நம்மில் ஒரு மாபெரும் மக்கள் சமூகம் உண்டு. பிழை அவர்கள் மீதில்லை. வேளைக்கொரு புத்தம்புதுப் படம் பாருங்கள், சுதந்தர தினத்தைக் கொண்டாடித் தீருங்கள் என்று தொலைக்காட்சிகளும், பட்டப்பகலில் சங்கிலிப் பறிப்பு, காதலனுடன் எஸ்கேப் ஆன மணப்பெண் போன்ற சர்வதேச முக்கியத்துவம் மிக்க செய்திகளாலும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் பிரம்மாண்டத் திரைப்பட விளம்பரங்களாலும் பக்கங்களை நிறைக்கும் பத்திரிகைகளும்தான் காரணம்.</p>
<p>விஷயம் எளிது. இந்த வருஷம் ஆகஸ்டு பதினாலாம் தேதி பாகிஸ்தானியர்கள் தமது சுதந்தர தினத்தைக் கொண்டாடவில்லை. ஒப்புக்கு ஒரு கொடியேற்றிவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். அதையேகூட ஒளிந்து நின்றுதான் ஏற்ற வேண்டிய நிலைமை. மழையென்றால் பேய் மழை. வெள்ளமென்றால் பிசாசு வெள்ளம். இங்கே அங்கே என்றல்ல. தேசமே நாசமாகிப் போன பெரும் அழிவு. சேத மதிப்பு, உயிரிழந்தோர் எண்ணிக்கை, வீடு போனவர்களின் புலம்பல்கள், காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு இன்னோரன்ன சமாசாரங்களுக்காகவெல்லாம் சேர்த்து நாலு முறை உச்சு, உச்சு, உச்சு, உச்சுவென்று சொல்லிவிடவும். கிட்டத்தட்ட ஒரு கோடியே பதினேழு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மாத்திரம் இந்த இடத்திலே சொல்லிவைக்கலாம்.</p>
<p>ஏற்கெனவே பொருளாதார சமாசாரங்களில் குவார்ட்டர் அடித்துவிட்டுக் குப்புறக் கிடக்கும் குடிமகன் மாதிரி பாகிஸ்தான் சுருண்டு கிடக்கிறது. இந்த அழிவுக்குப் பிறகு எழுந்து நிற்க எத்தனைக் காலமாகும் என்று எளிதில் சொல்லுவதற்கில்லை.</p>
<p>அமெரிக்கா உதவுகிறதா, சரி. சீனா பணம் தருகிறதா சந்தோஷம். இந்தியா எதாவது செய்யணுமா? ம்ஹும். நேரடியாக வேண்டாம். ஐநா மூலம் அனுப்புங்கள் போதும் என்று விடாத மழையிலும் அடாத அசிங்க அரசியல் நிகழ்ந்தாலும், இது கரித்துக் கொட்டும் சமயமல்ல. நாசமாய்ப் போன அரசியல் எப்போதும் அப்படித்தான். மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்தப் பக்கம் பஞ்சாபில் ஆரம்பித்து, அந்தப்பக்கம் பத்தானியர்கள் பிரதேசம் வரைக்கும் இண்டு இடுக்கு விடாமல் அள்ளிக்கொண்டு ஓடிவிட்டது வெள்ளம். </p>
<p>இது தொடர்பான பல காட்சிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. சாலைகளில் கடல் போல் கொந்தளித்தபடி ஓடிவரும் தண்ணீர், ஒரு கொத்து மக்களை அப்படியே அள்ளிச் சுருட்டி மடக்கித் தள்ளுகிறது. ஐயோ என்று கதறுகிறார்கள். மாபெரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அடியில் யாரோ குழி தோண்டி நகர்த்தியது மாதிரி கொடகொடகொடகொடவென்று சரிந்து நீரில் விழுந்து காணாமல் போகிறது. நூற்றுக்கணக்கான மாடுகளும் ஆடுகளும் தண்ணீரில் அடித்துச் சுழற்றியபடி இறுதி ஊர்வலம் போகின்றன. இரண்டு பேருந்துகள், பத்திருபது லாரிகள் முதலை வாய் பிளப்பதுபோல் குப்புற மிதந்து நகர்கின்றன. பலப்பல பாலங்கள் இடிந்து பொடிப்பொடியாகிக் கிடக்கின்றன. வானில் கொடகொடத்து உணவுப் பொட்டலங்களை வீசும் ஹெலிகாப்டரை ஓட்டுபவர் கண்ணிலும் மரணபயம் தெரிகிறது. கீழே அவர் வீட்டாருக்கு என்ன ஆச்சென்று சொல்வதற்கில்லை. நுரை ததும்பத் ததும்பச் சுழித்து ஓடும் வெள்ளத்தில் சடாரென்று மிலிட்டரி ஜவான் ஒருவர் பாய்கிறார். கடற்கரையில் நண்டு பிடிக்கிற பாவனையில் விரல்களால் எதையோ துழாவி அவர் வெளியே மீளும்போது கையிலொரு கைக்குழந்தை!</p>
<p>அந்தக் கதறல்களும் ஓலங்களும் அவலங்களும்கூடப் பரவாயில்லை. குறிப்பிட்ட இந்த வெள்ள வீடியோக் காட்சிகளுக்கு அடியில் நமது உடன்பிறப்புகள் சிலர் எழுதியிருக்கும் கமெண்டுகள்கூட சரித்திரம் காணாதவை. மாதிரிக்குச் சில:</p>
<p><em>· இயற்கைக்கே நீங்கள் உயிருடன் இருப்பது பிடிக்கவில்லை போலிருக்கிறது.</em></p>
<p><em>· ஆஹா, இது இறுதித் தீர்ப்புநாள். தயவுசெய்து வாய்தா கேளாமல் பஞ்சாயத்தை அட்டண்ட் பண்ணிவிடுங்கள்.</em></p>
<p><em>· சொர்க்கத்தின் சுந்தரக் கன்னியர் கண்ணில் தென்பட்டால் மறக்காமல் ஒரு ட்வீட்டாவது போடவும்.</em></p>
<p><em>· உலக மக்கள் தொகைப் பிரச்னையைத் தீர்க்க நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஆண்டவன் கண்டிப்பாக அருள் பாலிப்பான்.</em></p>
<p><em>· சுரண்டித் தின்றதெல்லாம் செரிக்க வெள்ள நீர் அருந்துங்கள்.</em></p>
<p>இன்னும் பல உள்ளன. இயற்கையாலுமேகூட நிகழ்த்த முடியாத இப்படிப்பட்ட பேரழிவுகளையும் பெருஞ்சிதைவுகளையும் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? யூ ட்யூபில் பார்க்கலாம். எல்லாம் நம் சொந்தச் சகோதரர்கள்தாம். </p>
<p>சினிமாவில் செந்திலும் வடிவேலுவும் அடிவாங்கினால் ரசித்துச் சிரிக்கலாம். வில்லனைக் கதாநாயகன் உதைத்துத் துவைத்தால் கைதட்டி மகிழலாம். கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் தோற்றால் விசிலடிக்கலாம். ஒரு மாபெரும் இயற்கைப் பேரழிவில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வும் வளமும் நாசமாவதைக் கண்டு கைகொட்ட முடியுமா! இறந்த குழந்தை ஒன்றின் சடலம் காட்டப்படும் வீடியோவுக்கு அடியில் ஒரு புண்ணியாத்மா இப்படி எழுதுகிறார்:<em> ‘நாளைய தீவிரவாதிகளுள் ஒருவன் இல்லை.’</em></p>
<p>இது என்ன நெஞ்சம்! </p>
<p>பாகிஸ்தான் மீதான நமது வஞ்சமும் நம் மீதான அவர்களது வஞ்சமும் ரத்த அணுக்களுக்குள் கலந்திருக்கின்றன. இதை அடித்துச் செல்லுமளவு வல்லமை மிக்க வெள்ளம் ஒன்று இதுகாறும் வரவில்லை. பிரச்னையில்லை. குறைந்தபட்சம் நாம் கற்கால மனோபாவத்திலிருந்தேவா இன்னும் மீண்டெழவில்லை? புரியவில்லை.</p>
<p>உலகில் முதல் முதலில் நாகரிகம் தோன்றிய பகுதியான மொஹஞ்சதாரோ இன்று பாகிஸ்தானில் இருக்கிறது. அல்லது நேற்று பாகிஸ்தானில் இருந்தது. வெள்ளம் அதையும் விட்டுவைக்கவில்லை. சரித்திரப் பிரசித்தி, தொல்லியல் பிரசித்தி பெற்ற அந்த இடுகாடு இன்று ஒரு மாபெரும் ஏரியாகிவிட்டது. </p>
<p>இங்கே நாகரிகமே அடித்துச் செல்லப்பட்டுவிட்ட பிறகு, அங்கே நாகரிகம் தோன்றிய பகுதி நன்றாயிருந்தாலென்ன, நாசமாய்ப் போனாலென்ன என்கிறீர்களா?</p>
<p>ஜெய் ஹிந்த்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&amp;p=1507</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>கழுதைகள் இழுக்கும் வண்டி</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=1504</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=1504#comments</comments>
		<pubDate>Thu, 26 Aug 2010 08:12:13 +0000</pubDate>
		<dc:creator>para</dc:creator>
				<category><![CDATA[அரசாங்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=1504</guid>
		<description><![CDATA[சில மாதங்களுக்கு முன்னர் பாஸ்போர்ட் வாங்குவதற்காக நான் என்னுடைய அடையாள ஆவணங்களை எடுத்துச் சரிபார்க்க வேண்டிவந்தது. அதாவது அரசாங்க முத்திரையுடன் என்னிடம் உள்ள ஆவணங்கள். முதலாவது என்னுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். நல்ல மார்க். சிறந்த எதிர்காலம். நன்கு படித்துக்கொண்டிருந்த பையன் என்பதற்கான அத்தாட்சி. என் பெயர், பள்ளியின் பெயர் விவரங்களுடன் கோபுர முத்திரை போட்ட சான்றிதழ். அதை ரிசல்ட் வந்த ஒரு சில தினங்களுக்குப் பிறகு சமீபகாலம் வரை யாருக்கும் எடுத்துக் காட்டவேண்டிய அவசியம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சில மாதங்களுக்கு முன்னர் பாஸ்போர்ட் வாங்குவதற்காக நான் என்னுடைய அடையாள ஆவணங்களை எடுத்துச் சரிபார்க்க வேண்டிவந்தது. அதாவது அரசாங்க முத்திரையுடன் என்னிடம் உள்ள ஆவணங்கள். </p>
<p>முதலாவது என்னுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். நல்ல மார்க். சிறந்த எதிர்காலம். நன்கு படித்துக்கொண்டிருந்த பையன் என்பதற்கான அத்தாட்சி. என் பெயர், பள்ளியின் பெயர் விவரங்களுடன் கோபுர முத்திரை போட்ட சான்றிதழ். அதை ரிசல்ட் வந்த ஒரு சில தினங்களுக்குப் பிறகு சமீபகாலம் வரை யாருக்கும் எடுத்துக் காட்டவேண்டிய அவசியம் நேராததால் பத்திரமாக பீரோவில் வைத்திருந்தேன். பாஸ்போர்ட்டுக்காக எடுத்து, பிரதிகள் செய்து விண்ணப்பித்தபோதுதான் அதிகாரியாகப்பட்டவர்கள் தூக்கிக் கடாசினார்கள். </p>
<p>இந்த ஆவணம் செல்லாது. பெயர் சரியில்லை என்று சொல்லிவிட்டார் ஓர் அதிகாரி. இதென்ன அநியாயம்? ராகவன் என்பது என் தாத்தா பெயரின் சுருக்கம். அவர் நினைவுக்காக என் தந்தை எனக்கிட்ட பெயர். இதைச் செல்லாது என்று யாரோ ஒருத்தர் சொன்னால் அவரை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணாமல் எப்படி விடுவது? </p>
<p>பலநூறு பேர் வரிசையில் காத்திருந்த பாஸ்போர்ட் அலுவலகத்தில் அந்த அதிகாரிக்கும் எனக்குமான துவந்த யுத்தம் ஒரு மத்தியானப் பொழுதில் தொடங்கியது. சரமாரியான என் வினாக்கள் எதற்குமே அவர் பதில் சொல்லவில்லை. புத்தர் மாதிரி மோனநிலை காத்து இறுதியில் ஜென் குருவைப் போல் ரத்தினச் சுருக்கமாகத் தன் தரப்பை விளக்கினார். சான்றிதழில் இருந்த பெயர் P. RAGAVAN. என் பாஸ்போர்ட் அப்ளிகேஷனுடன் நான் இணைத்திருந்த பிற அனைத்து ஆவணங்களிலும் இருந்த பெயர் P. RAGHAVAN. எனவே செல்லாது, செல்லாது என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். </p>
<p>என் முதல் அரசு ஆவணத்தைத் தயாரித்த, முகமறியா டைப்பிஸ்ட் இப்படி ஓர் எழுத்தை விழுங்கி இருபத்தி ஐந்து வருடங்கள் கழித்து என் வாழ்க்கையில் விளையாடக்கூடுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. </p>
<p>என் அப்ளிகேஷனை நிராகரித்துவிட்டார்கள். தோல்வியை விரட்டி வெற்றிக்கொடி நாட்டுவதன் பொருட்டு நான் பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து இரண்டு பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்து, அதை ஒரு கெசட்டட் ஆபீசரிடம் காண்பித்துக் கையெழுத்து வாங்கி இம்முறை மிகச் சரியாக அனைத்தையும் ஒப்பிட்டுச் சரிபார்த்துத் திரும்பக் கொண்டு போனேன். </p>
<p>இம்முறை வேறு அதிகாரி. வேறு கவுண்ட்டர். ஆதாரங்களை அவர் புரட்டிக்கொண்டே வர, நான் வெற்றிப் பெருமிதத்துடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லா ஆவணங்களிலும் நான் ராக்ஹவனாக அல்லவா இருக்கிறேன்? கண்டிப்பாக நிராகரிக்க முடியாது! </p>
<p>உங்கள் முகவரி எட்டாவது குறுக்குத் தெருதானே என்றார் அதிகாரி. </p>
<p>இதிலென்ன சந்தேகம்? அதுதான் சரியாக இருக்கிறதே. </p>
<p>ஆனால் உங்கள் டிரைவிங் லைசென்ஸில் எட்டுக்கு பதில் ஆறு என்று இருக்கிறது பாருங்கள் என்று காட்டினார். பகீரென்றது. ஐயா அது எட்டுதான். கால மாற்றத்தில் ஆறு போல் ஆகிவிட்டது. விரைவில் குட்டை போலவும் ஆகக்கூடும். பாலையாகவும் மாறலாம். அதற்கும் வயதாகிறது அல்லவா? தவிரவும் அந்நாளில் அழியாத பிளாஸ்டிக் அட்டைகளில் லைசென்ஸ் தருவதில்லை. டாட் மாட்ரிக்ஸ் ப்ரிண்டரில் அச்செடுத்த தாள். எப்படி அழியாதிருக்கும்? </p>
<p>என் நியாயமான விளக்கத்தை அவர் நல்லவராக இருந்திருந்தால் நிச்சயம் ஏற்றிருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக அவர் ஓர் அரசு அதிகாரியாக இருந்தபடியால் ரிஜெக்டட் என்று திருப்பிக் கொடுத்துவிட்டார். </p>
<p>எனக்கேற்பட்ட கடுங்கோபத்துக்கு அளவே இல்லை. ஆனால் கோபித்துப் பயனுமில்லை. எல்லை தாண்டவேண்டுமென்றால் பாஸ்போர்ட் அவசியம். வாழ்க்கையில் முன்னுக்குவர, தேவைப்படும்போது எல்லைமீறத்தான் வேண்டும். </p>
<p>எனவே கட்டுப்படுத்திக்கொண்டு என் அடுத்த புனித யாத்திரையை ஆரம்பித்தேன். இப்போது மோட்டார் வாகன லைசென்ஸ் வழங்கும் அதிகாரி. பழைய லைசென்ஸைப் புதுப்பிப்பதற்கான விஞ்ஞாபனம். இப்பவும் நாளது பங்குனி 23 விரோதி வருஷம் புண்ணிய க்ஷேத்திரமாம் குரோம்பேட்டை, நியூ காலனி எட்டாவது குறுக்குத் தெரு, முதலாம் எண் வீட்டில் வசிக்கிற பிராகவனாகிய நான் எனது லைசென்ஸ் அட்டையைப் புதுப்பிப்பதன் பொருட்டும் அதிலுள்ள எழுத்துப் பிழைகளைக் களைவதன்பொருட்டும் இவ்விண்ணப்பத்தினைத் தங்கள் மேலான கவனத்துக்குச் சமர்ப்பிக்கின்றேன். </p>
<p>அவர்கள் அதற்கான ஆதாரமாக ரேஷன் கார்டை எடுத்து வரச் சொன்னார்கள். குலை நடுங்கிவிட்டது. அதிலென்ன எழுத்துப் பிழை இருக்கப் போகிறதோ என்று பத்துப்பக்கங்கள் கொண்ட அந்த அட்டைப் புத்தகத்தை அரிசி/கோதுமை/அஸ்கா/மண்ணெண்ணெய் என்று காலம் காலமாகப் போட்டிருந்த பக்கங்கள் முதற்கொண்டு பின்னட்டை இறுதி வாசகம் வரை ஒழுங்காக ஒருமுறை ப்ரூஃப் பார்த்தேன். எல்லாம் சரிதான் என்று தீர்மானமாகத் தோன்றினாலும் ஒருமாதிரி வயிற்றுக்கோளாறு ஏற்பட்டவனின் பதற்ற உணர்விலேயே இருந்தேன். </p>
<p>பெரிய பிரச்னையில்லாமல் ஓரிரு தினங்களில் நாலைந்து இடங்களுக்கு மட்டும் அலையவைத்து என் டிரைவிங் லைசென்ஸைப் புதுப்பித்துக் கொடுத்துவிட்டார்கள். புதுப்பித்த கணத்தில் ஒரு சம்பவம் நடந்தது. என்னை உட்காரவைத்து, என் கண் முன்னாலேயே ஒரு பெண்மணி என்னைப் பற்றிய விவரங்களை கம்ப்யூட்டரில் டைப் செய்தார். நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே P. RAGHAVAM என்று அவரது விரல்கள் விளையாட, அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்று அப்படியே எழுந்து சாஷ்டாங்கமாக அவர் காலில் விழப் போய்விட்டேன். பதறி எழுந்தவர் என்னவென்று விசாரிக்க, முன்கதைச் சுருக்கத்தை அவருக்கு விளக்கி, ‘கொஞ்சம் நகர்ந்துகொண்டீர்கள் என்றால் நானே டைப் செய்கிறேன். என்பொருட்டு உங்களுக்கு அந்த சிரமம்கூட வேண்டாம்’ என்று சொன்னேன். </p>
<p>பாஸ்போர்ட் அலுவலகத்தின்மீது நான் நிகழ்த்திய மூன்றாவது படையெடுப்பின்போது என் ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருந்தன. நிச்சயமாக வேலை முடிந்துவிடும் என்ற அபார நம்பிக்கையுடன் சென்றேன். </p>
<p>என் நம்பிக்கை வீண் போகவில்லை. எனக்கு பாஸ்போர்ட் கிடைத்து, இரண்டு நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன் என்பது உண்மையே. ஆனால் அம்மூன்றாம் படையெடுப்பில் எனக்கு ஓர் இக்கட்டு வர இருந்ததும் உண்மையே. </p>
<p>ஆவணங்களில் ஒன்றாக நான் எடுத்துச் சென்றிருந்த &#8211; ஆனால் அவசியம் தேவைப்படாத ஓர் ஆவணம் என்னுடைய PAN. இது நான் வரி கட்டுமளவு வருமானமில்லாத காலத்தில் என் தந்தையின் ஆர்வக்கோளாறினால் அவசரப்பட்டு வாங்கப்பட்ட ஒரு துண்டுக் காகிதம். </p>
<p>அப்போதைய PAN அப்ளிகேஷனில் என்னென்ன கேட்டிருந்தார்கள் என்றெல்லாம் எனக்கு சுத்தமாக நினைவில்லை. என் பெயர், என் அப்பா பெயர், என் தாத்தா பெயர் மூன்றையும் அவசியம் கேட்டிருக்கவேண்டும். என் பெயர் ராகவன், என் அப்பா பெயர் பார்த்தசாரதி, தாத்தா பெயர் ராகவாச்சாரி என்று வெகு நிச்சயமாக என் தந்தை சரியாகத்தான் அதனை நிரப்பியும் இருப்பார். </p>
<p>என் பிரத்தியேகச் செல்ல விதி அதிலும் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தியிருந்தது. எனது அட்டையில் என் பெயர் பார்த்தசாரதி ராகவன் என்றும் என் அப்பாவின் பெயர் ராகவாச்சாரி என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அட்டை கிடைத்துப் பல்லாண்டு காலம் வரை அதை உபயோகிக்குமளவு வருமான விருத்தி எனக்கு ஏற்படாதபடியால் அது பாட்டுக்கு எங்கோ ஒரு மூலையில் சும்மா கிடந்தது. அதிலிருந்த பிழையை எண்ணிப் பதறி, சரி செய்யத் தோன்றவேயில்லை. </p>
<p>இப்போதைய அனுபவங்களுக்குப் பிறகு, எப்படியும் இந்த அட்டை என்றேனும் பிரச்னை தரலாம் என்று தோன்றியதால் புதிய PAN கார்டுக்காக மறுவிண்ணப்பம் செய்து, நாந்தான் ராகவன், என் அப்பா பார்த்தசாரதிதான் என்பதற்கான உரிய ஆவண ஆதாரங்களையும் சேர்த்து அனுப்பியிருந்தேன். </p>
<p>நேற்று வருமான வரித்துறையிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. நீங்கள் ராகவன் என்பதற்கும் உங்கள் அப்பா பார்த்தசாரதி என்பதற்கும் மட்டுமே நீங்கள் ஆதாரம் அளித்திருக்கிறீர்கள். ராகவாச்சாரி என்பார் உமது தாத்தாதான் என்பதற்கான போதிய ஆதாரங்களை நீங்கள் காட்டியிருக்காதபடியால் இந்த விண்ணப்பம் செல்லாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் ஆவணங்களின்படி உங்கள் அப்பா ராகவாச்சாரிதான் என்பதையும் உடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஃபார்வர்டட். பை ஆர்டர். </p>
<p>மேற்கொண்டு போரிட எனக்கு விருப்பமோ தெம்போ இல்லை. நியாயமாக இது குறித்துப் போரிடவேண்டிய என் அப்பா என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்க்கிறேன். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&amp;p=1504</wfw:commentRss>
		<slash:comments>25</slash:comments>
		</item>
		<item>
		<title>தனியா-வர்த்தனம் 3</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=1345</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=1345#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 07:48:57 +0000</pubDate>
		<dc:creator>para</dc:creator>
				<category><![CDATA[பயணம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=1345</guid>
		<description><![CDATA[அதே கிராண்ட் டிரங்க். அதே முதல் வகுப்பு ஏசி. இரண்டு நாள் டெல்லியின் பேய் மழையை அனுபவித்துவிட்டு [பள்ளங்களிலெல்லாம் மாருதி கார்கள் மிதக்கின்றன – உபயதாரர்: காமன்வெல்த் போட்டிகள் - மந்திரிமார்கள் செல்லும் ராஜபாதைகளைத் தவிர மற்ற பிராந்தியமெல்லாம் அடித்த மழையில் அடையாளம் தெரியாத அளவுக்கு நாறிக்கிடக்கின்றன. ஒரே நாளில் 11 செண்டிமீட்டர்.] நான் போன ஜோலியையும் முடித்துக்கொண்டு திரும்பும்போது ஒரு நல்ல பேச்சுத்துணைவர் கிட்டினார். அவர் ஒரு ரயில்வே சிப்பந்தி. முதல் இரண்டாம் மூன்றாம் ஏசி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அதே கிராண்ட் டிரங்க். அதே முதல் வகுப்பு ஏசி. இரண்டு நாள் டெல்லியின் பேய் மழையை அனுபவித்துவிட்டு [பள்ளங்களிலெல்லாம் மாருதி கார்கள் மிதக்கின்றன – உபயதாரர்: காமன்வெல்த் போட்டிகள் - மந்திரிமார்கள் செல்லும் ராஜபாதைகளைத் தவிர மற்ற பிராந்தியமெல்லாம் அடித்த மழையில் அடையாளம் தெரியாத அளவுக்கு நாறிக்கிடக்கின்றன. ஒரே நாளில் 11 செண்டிமீட்டர்.] நான் போன ஜோலியையும் முடித்துக்கொண்டு திரும்பும்போது ஒரு நல்ல பேச்சுத்துணைவர் கிட்டினார். அவர் ஒரு ரயில்வே சிப்பந்தி. </p>
<p>முதல் இரண்டாம் மூன்றாம் ஏசி வகுப்புகளில் முப்பது வருடங்களாக வசித்து வருபவரான அவர், முதல் வகுப்பில் தாம் சந்தித்த சில மறக்கவொண்ணா மனிதர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதிலொன்று அரசியல்வாதிகளைப் பற்றியது. ரயிலில் பயணம் செய்யும் அரசியல்வாதிகள். </p>
<p>முதல் வகுப்பில் பயணம் செய்யும் அரசியல்வாதிகளிலேயே மிக மோசமானவர் மாயாவதி என்று நண்பர் சொன்னார். மாயாவதி, ஒருபோதும் தன் பயணத்திட்டத்தை முன்கூட்டி ரயில்வேக்குத் தெரிவித்து டிக்கெட் புக் செய்வதில்லை. புறப்படுவதற்குப் பத்து நிமிடங்கள் முன்னர்தான் தகவல் வருமாம். முதல் வகுப்பில் ஒரு முழு கேபினை அவருக்கு ஒதுக்கியாகவேண்டும். யாராவது ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் அவரை இடம்பெயரச் சொல்லவேண்டும். </p>
<p>வேறு கேபின்களில் இடமில்லாவிட்டால் அன்னார் வேறு கம்பார்ட்மெண்டுக்குப் போகவேண்டியதுதான். மாயாவதி மேடம், மாயாவதி மேடம், நீங்கள் ரிசர்வ் செய்யாதபடியால் உங்களுக்கு இருக்கை இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதுவும் குறிப்பாக அவர் கேபின் ‘பி’யைத்தான் கேட்பாராம். </p>
<p>இது முதல்கட்டம். அடுத்தது இன்னும் விசேஷம். மாயாவதி அம்மையார் கேபினுக்குள் நுழையும்போது அவரோடு மூன்று பேர் உடன் வருவார்கள். இவர்கள் செக்யூரிடி காவலர்கள் அல்லர். அது தனி. கதவுக்கு வெளியே இரண்டுபேர் நிற்பார்கள். இந்த மூவரும் அவருக்குக் கால், கை பிடித்து விடுவதற்காக வருபவர்களாம். பொதுவாக அந்த மூவருக்கும் டிக்கெட் வாங்குவதில்லை என்று நண்பர் சொன்னார். ஒரு டிக்கெட்டில் நான்கு பேர் முதல் வகுப்பில் பயணம் செய்யலாம் என்கிற புதிய கலாசாரத்தைப் பிற அரசியல்வாதிகளுக்குக் கற்றுத்தந்தவர் மாயாவதி அம்மையார்தான் என்றும் சொன்னார். </p>
<p>மாயாவதி ரயிலில் ஏறியதும் செய்யும் முதல் காரியம், பெட்டியில் உள்ள பணியாளர்களுள் உயர்ந்த க்ரேடு உள்ளவர் யார் என்று கேட்பதுதான். க்ளீனர்கள், மெக்கானிக்குகள், சூபர்வைசர்கள் என்று மூன்று கிரேடுகள் இதில் உண்டு போலிருக்கிறது. இம்மூன்று பிரிவினருள் சூபர்வைசரை மட்டும் அழைத்து அவரைத் தன் அறை முழுவதையும் பெருக்கித் துடைக்கச் சொல்வாராம். டாய்லெட்டையும் அவர்தாம் சுத்தம் செய்யவேண்டும் என்பது தேவியாரின் கட்டளை. </p>
<p>மாயாவதி ரயிலில் ஏறிவிட்டால் க்ளீனர்கள் சந்தோஷமாகிவிடுவார்கள். அவர்களுக்கு வேலையே இருக்காது என்பது தவிர, சமயத்தில் அம்மையார் கொஞ்சம் பணமும் கொடுப்பார் போலிருக்கிறது. பாவப்பட்ட உயர்ந்த கிரேடு சூபர்வைசர்கள், மாயாவதியின் கேபினை சுத்தமாகப் பெருக்கித் துடைப்பது, கதவு, சன்னல்களில் படிந்துள்ள புழுதியை அகற்றுவது, சிறு கிறுக்கல்கள், கறைகள் ஒட்டிக்கொண்டிருந்தால் அவற்றைத் துடைப்பது, ஜன்னல் ஸ்கிரீன்களை மாற்றுவது போன்ற திருப்பணிகளை முணு முணுத்தவாறே செய்யக் கடமைப்பட்டவர்கள். தவிரவும் அம்மையாரின் கால்பிடிக்க வந்துள்ள முப்பெரும் தேவியர் என்ன கேட்டாலும் உடனுக்குடன் வாங்கித் தரவேண்டியதும் அவர்கள் பொறுப்பே. </p>
<p>‘அந்தப் பொம்பள ஏறினாலே சனியன் ஏறுதுன்னுதான் சார் சொல்லுவோம்’ என்று அந்த அதிகாரத்தை முடித்தார் நண்பர். </p>
<p>அடுத்தவர் லாலு. [ரயில்வே ஊழியர்கள் ஒரே ரயிலில் தொடர்ந்து பயணம் செய்வதில்லை. தேசமெங்கும் ரூட் மாற்றி மாற்றித்தான் அனுப்புகிறார்கள்.] </p>
<p>மாயாவதியின் குணாதிசயங்களில் இருந்து சற்றே மாறுபட்டவர் லாலு. லாலு, தாமாக எதையும் பேசமாட்டார், உத்தரவிடமாட்டார். ஆனால் அவருடன் வரும் அடிப்பொடிகள் சுமார் பத்துப்பேர் ரயில்வே ஊழியர்களை வறுத்து எடுத்துவிடுவார்களாம். ஒருமுறை போர்த்திக்கொள்ளக் கொடுத்த கம்பளி குத்துகிறது என்று லாலு சொல்ல, அந்தக் கணமே கம்பளியின் இருபுறமும் வெல்வெட் துணி வைத்துத் தைத்துத் தரச்சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டியிருக்கிறார்கள். </p>
<p>ஓடுகிற ரயிலில் வெல்வெட் துணிக்கு எங்கே போவது? எப்படியோ சமாளித்து அடுத்த ஸ்டேஷனில் சொல்லிவைத்து, குத்தாத வேறு கம்பளி வாங்கிக்கொடுத்து சமாளித்திருக்கிறார்கள். </p>
<p>மாதவராவ் சிந்தியா குடும்பத்தில் யாராயிருந்தாலும் முறைப்படி ரிசர்வ் செய்வது வழக்கம். சிந்தியா [இருந்தபோது]வே வந்தாலும் சரி, அவரது உறவினர்கள் யாராயிருந்தாலும் சரி. ஒருபோதும் பிற அரசியல்வாதிகள்போல் கடைசி நேரப் படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதில்லையாம். </p>
<p>என்ன ஒரே ஒரு விஷயம், அமைச்சர் வருகிறார் என்று ஏகப்பட்ட ஆயத்தங்கள் செய்து தயாராக இருப்பார்கள் ஊழியர்கள். ஆனால் ஒருபோதும் ரிசர்வ் செய்த நாளில், ரிசர்வ் செய்த வண்டியில் சிந்தியாக்கள் ஏறியதே கிடையாதாம். </p>
<p>ரயிலில் குடிக்கக்கூடாது என்பது சட்டம். புகை பிடிக்கக்கூடாது என்பதும் சட்டம். ஆனால் சில பீகார், மத்திய பிரதேச எம்பிக்கள் ஏறும்போதே பெட்ரோல் கேன் அளவுக்கு சரக்கோடுதான் ஏறுவார்களாம். பெட்டியின் நடுவே துணி விரித்து சரக்கையும் சைட் டிஷ்களையும் பரப்பி, சீட்டுக்கட்டு பிரித்து இரவெல்லாம் கூத்தாடுவதில் அவர்களுக்குத் தனிப்பிரியம். </p>
<p>கேட்கவும் முடியாது. ஏதும் சொல்லவும் முடியாது. எம்பிக்களைச் சுட்டிக்காட்டி மற்ற பயணிகள் தங்களையும் புகைபிடிக்க அனுமதிக்கச் சொல்லி மல்லுக்கட்டுவார்களாம். ‘அதிகாரம்னு ஒண்ணை எவன்சார் கண்டுபிடிச்சான்?’ என்றார் நண்பர். </p>
<p>வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். நாகரிகம் கருதி இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&amp;p=1345</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
		</item>
		<item>
		<title>தனியா-வர்த்தனம் 2</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=1336</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=1336#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 07:40:08 +0000</pubDate>
		<dc:creator>para</dc:creator>
				<category><![CDATA[பயணம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=1336</guid>
		<description><![CDATA[விடிந்ததும் பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிட முடிவு செய்திருந்தேன். மாவோயிஸ்டுகளும் ரயில் கொள்ளையரும் காலைப் பொழுதை அநேகமாக எதற்கும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றொரு எண்ணம். அவ்வண்ணமே படுக்கையை விரித்து, இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தும் விட்டேன். ஒரு சில நிமிடங்களில் அந்த தடதட சத்தம் ஆரம்பித்துவிட்டது. புத்திக்குள் பல்ப் எரிந்தது. மகனே இது வடவர் தேசம். இங்கே ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட், அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட் என்கிற பேதமெல்லாம் இல்லை. மெல்ல திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தால் சுமார் 101 [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>விடிந்ததும் பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிட முடிவு செய்திருந்தேன். மாவோயிஸ்டுகளும் ரயில் கொள்ளையரும் காலைப் பொழுதை அநேகமாக எதற்கும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றொரு எண்ணம். </p>
<p>அவ்வண்ணமே படுக்கையை விரித்து, இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தும் விட்டேன். ஒரு சில நிமிடங்களில் அந்த தடதட சத்தம் ஆரம்பித்துவிட்டது. புத்திக்குள் பல்ப் எரிந்தது. மகனே இது வடவர் தேசம். இங்கே ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட், அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட் என்கிற பேதமெல்லாம் இல்லை. </p>
<p>மெல்ல திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தால் சுமார் 101 பேர் நான் வசித்த கம்பார்ட்மெண்டின் கதவருகே நின்று தட்டு தட்டென்று தட்டிக்கொண்டிருந்தார்கள். கதவைத் திற. கலவரம் வரட்டும். ஒரு கணம் என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த புலர்காலைப் பொழுதிலாவது ரயில்வே சிப்பந்திகள் யாராவது, முதல் வகுப்புச் சிறைவாசி உயிருடன் இருக்கிறானா என்று பார்க்க வந்திருக்கலாம். வரவில்லை. எனவே என் தனிப்பட்ட புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி, சிக்கலேதும் உருவாகாதிருக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தேன். </p>
<p>நடனமாடிப் பார்க்க ஆசைப்பட்டேன் என்று சொன்னேன் அல்லவா? அதில் ஒரு பகுதியாக, மூடிய கதவுக்குப் பின்னால் கண்ணாடி சன்னலின் அருகே பாதுகாப்பாக நின்றபடி அபிநயம் மட்டும் பிடிக்க ஆரம்பித்தேன். இது முதல் வகுப்புப் பெட்டி. நீங்கள் இடம் மாறி வந்து கதவைத் தட்டுகிறீர்கள். இது முதல் அபிநயம். அடுத்த அபிநயம், என்னால் கதவைத் திறக்க முடியவில்லை. எங்கோ சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதாகும். </p>
<p>திறந்துவிட்டால்தான் என்ன என்றும் தோன்றியது. ஆனால் பன்னிரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய மூன்று கேபின்கள் கொண்ட தனி கோச். 101 பேரை நிச்சயம் தாங்காது. எப்படி ஒரே ஒரு நபரைத் தாங்கத் திணறுகிறதோ அதே போல. பேசாமல் நடைவழியாக அடுத்த கம்பார்ட்மெண்டுக்கே போய்விடலாமா என்றும் நினைத்தேன். இதற்குள் வெளியே கதவிடித்த கூட்டம் கோபம் கொண்டு வேகமாக இடிக்கவும் காலால் உதைக்கவும் தொடங்கிவிட்டது. ஒருவேளை அந்தத் தாக்குதலில் கதவு திறந்துகொண்டால் என்னை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே போட்டுவிட்டுத்தான் அவர்கள் கோட்டையைப் பிடிப்பார்கள் என்று தோன்றியது. பயமாக இருந்தது. </p>
<p>நல்ல வேளையாக ரயில் புறப்பட்டுவிட்டது. அதன்பிறகு போபால் வரை எனக்குத் தூக்கம் வரவில்லை. கேட்டரிங் கலைஞர்கள் உப்புமா மட்டும்தான் சைவத்தில் உண்டு என்று சொல்லி ஒரு பிளேட் கொண்டுவந்து வைத்துச் சென்றதைச் சாப்பிட்டு ஒரு மாதிரி கிறுகிறுத்துப் போயிருந்தேன். அந்த முக்கால் மயக்க நிலையை சமாதி யோகம் என்றும் சொல்வார்கள். உலகம் எத்தனை மாறினாலும் ரயில்வே கேட்டரிங் என்பது ஒருபோதும் மாறாது. நாக்கில் படமுடியாத அதன் அவருசி, வாழ்வின் ஏதோ ஒரு குறிப்பிட்ட கேடுகெட்ட அம்சத்தின் நிரந்தரக் குறியீடு. </p>
<p>அன்று மாலை வரை பரீட்சைக்குப் படிப்பவன்போல் படித்துக்கொண்டிருந்தேன். தனிமை தனியாகத் தெரிந்த சமயங்களில் வாய்விட்டு உரக்கவும் படித்தேன். அலுப்புண்டான சமயங்களில் நண்பர்களுக்கு போன் செய்தேன். இந்தப் பயணம் ஒரு நல்ல பாடம் கற்றுத் தந்தது. பல்லாண்டு காலமாக அப்படியொரு முழுத்தனிமைக்காக நான் ஏங்கியிருக்கிறேன். அப்படியொரு சந்தர்ப்பம் கிட்டுமானால் உலகத்தையே புரட்டிவிடலாம், என்னென்னவோ சாதித்து முடித்துவிடலாம் என்று எப்போதும் எண்ணுவேன். </p>
<p>ஆனால் ஒரு முப்பத்தியெட்டு மணிநேரம் ஒருவார்த்தை கூடப் பேசுவதற்கு எதிராளி இல்லாமல், மனித வாசனையே இல்லாமல் இருக்க நேருமானால் விளைவு நிச்சயம் விபரீதம்தான். எளிய உதாரணம் &#8211; உபயோகமில்லாத இந்தக் கட்டுரை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&amp;p=1336</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>தனியா-வர்த்தனம் 1</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=1335</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=1335#comments</comments>
		<pubDate>Mon, 23 Aug 2010 07:25:45 +0000</pubDate>
		<dc:creator>para</dc:creator>
				<category><![CDATA[பயணம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=1335</guid>
		<description><![CDATA[கொஞ்சம் படிக்கவும் எழுதவும் வேண்டியிருந்தது. சரி, போகிற தூரத்தில் பொழைப்பாற்றலாமே என்று ரயிலில் டிக்கெட் போடச் சொல்லியிருந்தேன். விலை விகிதத்தில் விமானத்துடன் பெரிய வித்தியாசமில்லாத முதல் வகுப்புப் பெட்டி. இரண்டு இரவுகள், ஒரு பகல். ஸ்டேஷன் ஸ்டேஷனாக விதவிதமான இந்தி கேட்கலாம், வடவர் சப்பாத்தி சாப்பிட்டு ஹரே பஹ்ஹ்ய்யா என்று அடி வயிற்றிலிருந்து கூப்பிட்டுப் பார்க்கலாம், பத்தினியும் பத்திரியும் பக்கத்தில் இல்லாத சௌகரியத்தில், தனிமை கிட்டினால் பாட்டுப் பாடி டான்ஸ்கூட ஆடிப் பாடிப்பார்க்கலாம், ஒரு முழுநீள பாரத் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கொஞ்சம் படிக்கவும் எழுதவும் வேண்டியிருந்தது. சரி, போகிற தூரத்தில் பொழைப்பாற்றலாமே என்று ரயிலில் டிக்கெட் போடச் சொல்லியிருந்தேன். விலை விகிதத்தில் விமானத்துடன் பெரிய வித்தியாசமில்லாத முதல் வகுப்புப் பெட்டி. இரண்டு இரவுகள், ஒரு பகல். ஸ்டேஷன் ஸ்டேஷனாக விதவிதமான இந்தி கேட்கலாம், வடவர் சப்பாத்தி சாப்பிட்டு ஹரே பஹ்ஹ்ய்யா என்று அடி வயிற்றிலிருந்து கூப்பிட்டுப் பார்க்கலாம், பத்தினியும் பத்திரியும் பக்கத்தில் இல்லாத சௌகரியத்தில், தனிமை கிட்டினால் பாட்டுப் பாடி டான்ஸ்கூட ஆடிப் பாடிப்பார்க்கலாம், ஒரு முழுநீள பாரத் யாத்ரா நடத்திவிட்ட பெருமிதம்வேறு இறுதியில் கிட்டும். இன்னோரன்ன சின்ன சந்தோஷங்களை உத்தேசித்து டெல்லிக்கு இம்முறை ரயிலில் புறப்பட்டேன். அந்த சிறுவர் எழுத்துப் பயிலரங்கம்? அது கிடக்கட்டும். அப்புறம் பார்ப்போம். ரயில் விஷயத்தை முதலில் சொல்லவேண்டும். </p>
<p>எனக்குக் கிடைத்தது கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ். இதனை கிராண்டு டிரங்கு எக்சுபிரசுவாக்க யாரும் எக்காலத்திலும் முயற்சியேதும் எடுக்காதபடியால் சென்னை செண்ட்ரலிலிருந்தே ஒரே இந்திமயமாக இருந்தது. ஒரு ரயில்வே சிப்பந்தியிடம் விசாரித்தபோது, விவரம் தெரிந்தது. தமிழ்நாடு எக்ஸ்பிரசில்தான் தமிழ் வாசனை இருக்குமாம். இது வடவர் எக்ஸ்பிரஸ். கடைச்சிப்பந்திகள்கூட நமஸ்தே சாப் என்றுதான் சொல்கிறார்கள். ராத்திரி சாப்பிடுவதற்கு பிரியாணி தவிர வேறொன்றும் கிடையாது என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிடுகிறார்கள். வேண்டுமானால் ப்ரெட் ஆம்லெட். எனக்கு வேண்டாம் என்றேன். சரி பட்னிகிட என்று சொல்லிவிட்டார்கள். </p>
<p>ஏறியவுடன் நிகழ்த்தப்பட்ட இக்கொடூரத் தாக்குதலிலிருந்து விடுபடவே இரவு பத்து மணியாகிவிட்டது. அதுவரை கம்பார்ட்மெண்டில் வேறு யாரும் ஏறவில்லை. டிடிஆரும் வரவில்லை. நான்குபேர் அமரத்தக்க வசதியான அறை. நல்ல இருக்கைகள், படுக்கைகள். ஜில்லென்ற ஏசி. தண்ணீரைக் குடித்துவிட்டு நான் பேசாமல் படுத்திருக்க வேண்டும். ஆனால், யாராவது வந்து கதவைத் தட்டினால் எழுந்து திறக்கவேண்டுமே என்கிற நல்லெண்ணத்தில், தூங்காமல் படித்துக்கொண்டிருந்தேன். </p>
<p>பத்தே முக்காலுக்கு டிடிஆர் மாதிரி தோற்றமளித்த ஒருத்தர் வந்தார். என் மூன்று மணிநேர மௌன விரதத்தைக் கலைத்து, அவரிடம் அன்பாகப் பேச்சுக்கொடுக்கப் பார்த்தேன். ம்ஹும். ஹம்கோ டமில் நை மாலும். ஓகேஜி மே அங்ரேசி மே போலூங்கா. </p>
<p>அதுவும் ஊஹும். நமக்கு ஹிந்தி மாதிரி அவர்களுக்கு அங்க்ரேசி போலிருக்கிறது. நான் அப்படிச் சொன்னதே ஒரு மாபாவம் என்பதுபோல் முறைத்துவிட்டு டிக்கெட்டில் என்னமோ நாலு கோடு கீசிவிட்டு விருட்டென்று வெளியே போனார். அடக்கடவுளே, இதென்ன சோதனை. சாப், சாப், ஏக் மினிட். என்ன என்றார் ஒரு சிவாஜி கணேசப் புருவமுயர்த்தலில். </p>
<p>கேபினுக்கு வேறு யாரும் வரப்போகிறார்களா? எனில் எந்த ஸ்டேஷனில் ஏறப்போகிறார்கள்? வரவேற்புக்கு நான் தயாராகவேண்டும். </p>
<p>அவர் ஒருமுறை சார்ட்டை மேலும் கீழும் பார்த்தார். பிறகு என்னைப் பார்த்தார். ஏ,பி,சி என்றிருந்த மூன்று கேபின்களையும் சுட்டிக்காட்டிவிட்டுப் பிறகு சொன்னார். இரண்டாயிரத்தி நூற்று எண்பத்தி நாலு கிலோ மீட்டரையும் நான் தனியேதான் கடந்தாக வேண்டும். </p>
<p>அடக்கடவுளே, ஒரு ரயிலின் ஒரு கம்பார்ட்மெண்ட் ஒரே ஒரு பயணிக்காக இணைக்கப்பட்டிருக்கிறதா? </p>
<p>அவர் இன்னொரு முறை சார்ட்டைப் பார்த்தார். பிறகு சொன்னார். ஆம். சமயத்தில் அப்படி ஆகிவிடுகிறது. எதற்கும் நீங்கள் எப்போதும் அறைக்குள் தாழ்ப்பாளைப் போட்டே வைத்திருங்கள். </p>
<p>ரயில் கொள்ளையர் பற்றி நான் கேள்விப்பட்டிருந்த சில சங்கதிகளெல்லாம் முதல் முறையாக என் நினைவில் வரிசையாக வரத் தொடங்கின. பார்த்த சில படங்களில் ரசித்த அத்தகு காட்சிகளும் மனக்கண்ணில் திரும்ப ஓடத் தொடங்கின. ஒரு மாதிரி பயம்போல் ஓருணர்வு டிக்கெட் வாங்காமல் வந்து உடன் உட்கார்ந்துகொண்டது. </p>
<p>மதிப்புக்குரிய டிடிஆர் அவர்களே, நீங்கள் இரவு இங்கே வந்து படுத்துக்கொள்ளலாமே? </p>
<p>நான் கூடூரில் இறங்கிவிடுவேன் என்று சொல்லிவிட்டுப் போயேவிட்டார். சரி, படிக்கலாம் என்று எடுத்தேன். பத்திருபது பக்கங்கள் தாண்டியிருக்காது. யாரோ கதவை தடதடவென்று இடிப்பதுபோன்ற சத்தம் கேட்டது. எழுத்தைத் தவிர என்னிடம் இன்னொரு ஆயுதம் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? என்னவாவது விபரீதமென்றால் என்ன செய்வது? சத்தம்போட்டால்கூட யாருக்கும் கேட்காது. இதென்ன வினோத இம்சை? ரயில்வே போலீஸ் என்றொரு இனத்தார் இருக்கிற சுவடே தெரியவில்லை. படுக்கை, தலையணை எடுத்துக்கொடுத்த பையனும் எங்கே போனான் என்று தெரியவில்லை. [மறுநாள் கண்ணில் பட்டான். விசாரித்தபோது செகண்ட் க்ளாஸ்ல படுத்துக்கறதுதான் சார் சேஃப் என்று திருவாய் மலர்ந்தான்.] இன்பமாகப் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் போகவென்று ரயிலைத் தேர்ந்தெடுத்தது தப்பாப்போச்சே. </p>
<p>பயந்தபடி கதவைத் திறந்தால் ஒரு ஸ்ப்ரேவுடன் ஒருத்தன் நின்றுகொண்டிருந்தான். க்யா? என்றேன் சுத்தமான உலகத் தர ஹிந்தியில். ஸ்ப்ரே சாப் என்றான் உத்தமோத்தமன். உடனே எனக்கு ஏன் ஜியாத் ஜரா எடுத்துச் சென்ற ஸ்ப்ரே நினைவுக்கு வரவேண்டும்? என் அடுத்த பதிலுக்கு அவன் காத்திராமல் அறைக்குள் புயலாக நுழைந்தான். திரைச் சீலைகள், இருக்கைகள் அனைத்தின்மீதும் அந்த ஸ்பிரேவை அடிக்கத் தொடங்கினான். க்யா? க்யா? என்றேன் ஒன்றும் புரியாமல். பிறகு அந்தச் சூழலுக்கு அது தகுந்த வினாச்சொல் அல்ல என்று புரிந்து க்யோங்? க்யோங்? என்று மாற்றிக்கேட்டேன். ரூம் ஸ்ப்ரே சாப் என்று சொல்லிவிட்டுப் போனான். ஒரு மாதிரி பேகான் ஸ்ப்ரேவையும் குட்டிகுரா பவுடரையும் கலந்து அடித்ததுபோல் ஒரு மணம். ரொம்ப நாராசமாக இருந்தது. அது மயக்க மருந்து இல்லை என்ற ஒரே காரணத்தால் சகித்துக்கொள்ள முடிவு செய்தேன். </p>
<p>இரவு முழுதும் நான் உறங்கவில்லை. முழுத்தனிமை என்பது ஒரு மணி நேரத்துக்குக் கூட உதவாத சமாசாரம் என்பது புரிந்துவிட்டது. பாட நினைத்ததெல்லாம் மறந்துவிட்டது. ஆடவும் தோன்றவில்லை. பாதி ஆந்திர பிரதேசம் தாண்டியபோது மாவோயிஸ்டுகள் ஞாபகம்வேறு வந்துவிட்டது.&#160; என்னைப் போன்ற ராக்கோழிகள் யார் யார் என்று மனத்துக்குள் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்காக போன் செய்து தலா பத்து பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். நல்லவேளை ஏதோ ஓரிடத்தில் சிக்னல் போய்விட்டது. விரைவில் விடிந்தும் விட்டது. </p>
<p>ஒரு ஆளுக்காக ஒரு கம்பார்ட்மெண்டையே கோத்து அனுப்புகிற இந்தியன் ரயில்வேயின் செயல்பாட்டை நல்ல மனசு என்பதா, வில்லன் மனசு என்பதா?</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&amp;p=1335</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>சிறுவர் எழுத்துப் பயிலரங்கம்</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=1331</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=1331#comments</comments>
		<pubDate>Tue, 17 Aug 2010 05:58:04 +0000</pubDate>
		<dc:creator>para</dc:creator>
				<category><![CDATA[பயிலரங்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=1331</guid>
		<description><![CDATA[வரும் வெள்ளி-சனி [ஆக. 20,21] இரு தினங்களில் சிறுவர்களுக்காக எழுதுவது &#8211; பதிப்பிப்பது தொடர்பான பயிலரங்கம் ஒன்று புது தில்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நாளை புறப்படுகிறேன். சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைவிட, எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று இப்பயிலரங்கம் கற்றுத்தரும் என்கிறார்கள். காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களை உருவாக்குதல் பற்றிய அமர்வு ஒன்று உள்ளது. ‘நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம்?’ என்று சிறுவர்களே விவரிக்கும் தனி அமர்வு ஒன்றும் உண்டு. தவிர, சிறுவர் புத்தகங்களுக்கு வரைதல் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வரும் வெள்ளி-சனி [ஆக. 20,21] இரு தினங்களில் சிறுவர்களுக்காக எழுதுவது &#8211; பதிப்பிப்பது தொடர்பான பயிலரங்கம் ஒன்று புது தில்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நாளை புறப்படுகிறேன். </p>
<p>சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைவிட, எ<a href="http://www.gbo-newdelhi.org"><img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="image" border="0" alt="image" align="left" src="http://www.writerpara.com/paper/wp-content/uploads/2010/08/image1.png" width="191" height="244" /></a>ப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று இப்பயிலரங்கம் கற்றுத்தரும் என்கிறார்கள். காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களை உருவாக்குதல் பற்றிய அமர்வு ஒன்று உள்ளது. ‘நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம்?’ என்று சிறுவர்களே விவரிக்கும் தனி அமர்வு ஒன்றும் உண்டு. </p>
<p> தவிர, சிறுவர் புத்தகங்களுக்கு வரைதல் தொடர்பாக, மொழிமாற்றம் செய்வது தொடர்பாக, பல்வேறு வயதுக் குழந்தைகளுக்கேற்ற மொழியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக, மீபுனைவு எழுத்து தொடர்பாகத் தனித்தனி அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. </p>
<p>விக்ரம் சேத், அனிதா ராய், ஷோபா டே, ப்ரீத்தி பால் போன்றவர்களோடுகூட மணி சங்கர ஐயர், ஷீலா தீக்‌ஷித் போன்ற சிலரும் இப்பயிலரங்கில் பேச வருகிறார்கள் என்பது சுவாரசியம். ஒரு சில வெளிநாட்டுச் சிறுவர் இலக்கியப் படைப்பாளிகளும் கலந்துகொள்கிறார்கள். </p>
<p><a href="mailto:info@gbo-newdelhi.org">புது தில்லி ஜெர்மன் புக் ஆபீஸ்</a> நிறுவனம் இந்தப் பயிலரங்கை நடத்துகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&amp;p=1331</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>இன்னொரு கந்தசாமியின் கதை</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=1326</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=1326#comments</comments>
		<pubDate>Mon, 16 Aug 2010 12:08:53 +0000</pubDate>
		<dc:creator>para</dc:creator>
				<category><![CDATA[சூரியக்கதிர் பத்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=1326</guid>
		<description><![CDATA[வீதியின் இருபுறமும் குழிகள் தோண்டி, சவுக்குக் கட்டைகள் நட்டார்கள். எங்கிருந்தோ பிடுங்கிவரப்பட்ட தென்னை ஓலைகள் சரசரவென்று பின்னப்பட்டுக் கூரை ஏறின. உபயதாரர் பெயர் எழுதப்பட்ட குழல் விளக்குகள், பொதுவில் உருவப்பட்ட மின்சாரத்தில் மினுங்கி எரியத் தொடங்கின. லவுட் ஸ்பீக்கரில் எல்.ஆர். ஈஸ்வரி உயிர் பெற்றதும் என் வீட்டு வாசலில் ஆடி மாதம் பிறந்தது. நம் நாட்டில் கேள்வி கேட்க முடியாத விஷயங்களுள் இதுவுமொன்று. பக்தியைக் கூண்டில் ஏற்றுவதாவது? ஆடி மாதமென்றால் அம்மனுக்கு விசேடம். அம்மனிடம் வாக்மன் கிடையாது, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வீதியின் இருபுறமும் குழிகள் தோண்டி, சவுக்குக் கட்டைகள் நட்டார்கள். எங்கிருந்தோ பிடுங்கிவரப்பட்ட தென்னை ஓலைகள் சரசரவென்று பின்னப்பட்டுக் கூரை ஏறின. உபயதாரர் பெயர் எழுதப்பட்ட குழல் விளக்குகள், பொதுவில் உருவப்பட்ட மின்சாரத்தில் மினுங்கி எரியத் தொடங்கின. லவுட் ஸ்பீக்கரில் எல்.ஆர். ஈஸ்வரி உயிர் பெற்றதும் என் வீட்டு வாசலில் ஆடி மாதம் பிறந்தது.</p>
<p>நம் நாட்டில் கேள்வி கேட்க முடியாத விஷயங்களுள் இதுவுமொன்று. பக்தியைக் கூண்டில் ஏற்றுவதாவது? ஆடி மாதமென்றால் அம்மனுக்கு விசேடம். அம்மனிடம் வாக்மன் கிடையாது, ஐபாட் கிடையாது. லவுட் ஸ்பீக்கர் வைத்தால்தான் அவளுக்குச் சரிப்படும். நாய்ஸ் பொல்யூஷன் என்பீரானால் நீர் சார்வாக மகரிஷியின் வம்சத்தில் வந்த கோர நாத்திகராவீர். லவுட் ஸ்பீக்கர், மஞ்சள் ஆடை, வேப்பிலை, கூழ், வெயில் இல்லாமல் ஆடி இல்லை. தள்ளுபடிகள் இதில் சேர்த்தியில்லை.</p>
<p>எங்கள் வீட்டு வாசலில் ஒரு சிறு அம்மன் கோயில் உண்டு. நாகவல்லியம்மன் என்றால் பிராந்தியத்தில் யாருக்கும் தெரியும். அம்மனுக்கு அடுத்த காம்பவுண்டில் உத்தியோகம் பார்க்கும் போலீசுக்காரர்கள், என்ன வழக்கு வந்தாலும் அவ்விடம் ஒருவார்த்தை சொல்லாமல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை. பல வழக்குகளுக்கு எஃப்.ஐ.ஆரே போடாமல் மிரட்டி, திருப்பி அனுப்புவதற்கும் நாகவல்லியம்மன் உத்தரவு தராததே காரணம் என்பார் பெரியோர். போலீஸ்காரர்கள் மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் வசிக்கும் டாக்டர்கள், திரைத்துறையாளர்கள், வர்த்தகர்கள், அவரவர் இல்லத்தரசிகள் அனைவருக்கும் அம்மன் வெகு நெருக்கம். மேற்படி ஆடித்திருவிழாவையே பகுதிவாழ் டாக்டர் ஒருத்தர்தான் சிரமேற்கொண்டு முன்னின்று நடத்துகிறார்.</p>
<p>மிகக் குறுகலான சாலையாச்சே, இரண்டு வாகனாதி வஸ்துகள் ஏக காலத்தில் நகரமுடியா நெருக்கடியாச்சே, பக்கத்தில் பள்ளிக்கூடம் வேறு இருக்கிறதே, பாலர்கள் பாடு திண்டாட்டமாச்சே என்றெல்லாம் சிந்திப்பதற்கில்லை. இது ஆடி. எனவே அடி, தூள்.</p>
<p>நாகவல்லியம்மன் சந்தனக்காப்பு ஏந்திக்கொண்டாள். வேப்பமரங்களுக்கு முடிதிருத்தம் செய்து வீதியெங்கும் சொருகிவைத்தார்கள். மஞ்சள் குளித்த பெண்கள், மஞ்சள் புடைவை அணிந்து, மஞ்சள் வளையல், மஞ்சள் ரிப்பன், சாமந்திப்பூ இவற்றையும் சாத்திக்கொண்டு, பால் உள்ளிட்ட காவடி எடுத்து வரும் காட்சி, கண் கொள்ளாதது. அதற்கப்புறம் நடப்பதுதான் ஆடியின் உச்சம்.</p>
<p>சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒருவாறு முடிவடைவதற்கு மாலை ஏழு மணி சாவகாசம் ஆகிவிடுகிறது. அதன்பிறகு மைக் செட்காரர் சன்னிதி வாசலில் ஒரு மைக்கைக் கொண்டுவந்து வைக்கிறார். பூசாரி ஹலோ மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ சொல்லிவிட்டு சைகை காட்டினால், இப்போது மீண்டும் ஸ்பீக்கரில் எல்லாரீஸ்வரி. இரண்டு நாளாக ஒலிக்கும் குரல்தான். ஆனாலும் இந்த இறுதிநாள் ஏழு மணிக்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. இம்முறை பக்தர்களில் பலருக்கு அருள் வந்துவிடுகிறது. நிற்கிற நேரத்தில் சுழலும் பம்பரம் போல அவர்கள் தம்மைத்தாமே ஓரிருமுறை சுற்றிக்கொண்டு, தடால் தடாலென்று அக்கம்பக்கத்து ஆசாமிகள் மீதெல்லாம் வந்து மோதி ஆட ஆரம்பித்துவிடுகிறார்கள்.</p>
<p>‘வா தாயி. நீ ஆரு? எந்தூரு ஆத்தா?’ மைக்கில் பூசாரி கேட்டதும் ஆத்தாவாகப்பட்டவள் தன் பயோ டேட்டாவைத் தெரிவிக்கத் தொடங்குகிறாள். </p>
<p>‘நா புன்னைநல்லூர் மாரியம்மா’</p>
<p>‘நல்வரவு தாயே. உம்புள்ளைங்கள நீதான் பாத்துக்கணும். அடுத்து ஆருப்பா அது? அந்தா பச்ச சேல.. இப்பிடி, இப்பிடி முன்ன வா ஆத்தா? நீ ஆரு? எந்தூரு?’</p>
<p>மருவத்தூர், எண்ணூர், உப்பிலியாபுரம், பீர்க்கங்கரணை, சமயபுரம், வேடசந்தூர், திருநின்றவூர், ஆத்துப்பாக்கம், பீளமேடு என்று எங்கெங்கிருந்தோ சாமிகள் புறப்பட்டுச் சரியாக ஏழு மணியளவில் என் வீட்டு வாசலில் வந்து நின்று அட்டண்டன்ஸ் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், என் பேட்டைவாசிகளின் நல்வாழ்வுக்கும் ஆசியளித்துத் திரும்புவதில் எனக்குப் பேச்சுமூச்சில்லாமல் போய்விடுகிறது.</p>
<p>இந்த ஆடிக்கு ஒரு தனி விசேஷம். அம்மன்களாக வந்துகொண்டிருந்த சமயம், திடீரென்று ஒரு ஆம்பள சாமி வேறு வந்துவிட்டார். அதுவும் மகாவிஷ்ணு. இதென்ன புதுக்குழப்பம்? பூசாரியின் தலைக்கு நாலடி உயரத்தில் எரிந்துகொண்டிருந்த குழல் விளக்கு சட்டென்று கீழிறங்கிவந்து அவர் தலைக்குள் எரிந்தது.</p>
<p>‘அட மகாவிஷ்ணுன்னா நம்ம ஆத்தாளுக்கு அண்ணன்லா? தங்கச்சி ஃபங்சனுக்கு வந்துட்டாப்ல. வா சாமி. இரு சாமி.’</p>
<p>தீர்ந்தது விஷயம்.</p>
<p>ஏழே முக்கால், எட்டு வாக்கில் ஆட்டம் களைகட்டத் தொடங்கிவிட்டது. எப்படியும் ஏழெட்டுப் பேருக்கு ஏககாலத்தில் சாமி வந்துவிட, அந்தச் சிறு முட்டுச் சந்தில் ஒருத்தர்மேல் ஒருத்தர் மோதிக்கொண்டு சுழன்று சுழன்று ஆடத் தொடங்கினார்கள். </p>
<p>திடீரென்று ஒரு சாமி, கூட்டத்தில் நின்றிருந்த யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து முன்னால் போட்டுவிட்டது.</p>
<p>‘ஆத்தா என்னாச்சி?’</p>
<p>‘இவ என்ன நம்பல. மனசுக்குள்ள சிரிக்கிறா.’</p>
<p>அடக்கடவுளே. இதென்ன அபாண்டம்? ஆர்டூ ஸ்டேஷனில்கூட எஃப்.ஐ.ஆர். போடமாட்டார்களே? அந்தப் பெண்மணி அழமாட்டாத குறையாகத் தன் தரப்பை நிரூபிக்க வழிதேடி, ஒருபிடி விபூதியை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு டமாரென்று நட்டநடுச் சாலையில் பூசனிக்காயைப் போட்டு உடைப்பதுபோல் விழுந்துவிட்டார். எப்படியும் அவருக்கும் சாமி வந்துவிடும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன். </p>
<p>‘அதெல்லாம் இல்லாத்தா&#8230; அவிங்களும் உன் பக்தைதான். நீ ஆடு. ஏப்பா.. ஸ்பீக்கர் சவுண்ட ஏத்து&#8230;இந்தாம்மா, நீ இந்தப்பக்கம் வா.’</p>
<p>மாடரேட்டரான பூசாரி, க்ரைசிஸ் மேனேஜ்மெண்டில் கைதேர்ந்தவர் போலிருக்கிறது. </p>
<p>நான் கவனித்த வரையில் கன்னிப்பெண்கள் யாருக்குமே சாமி வரவில்லை. எல்லோருமே திருமணமானவர்கள். சுமார் முப்பத்தி ஐந்திலிருந்து நாற்பத்தி ஐந்து வயதுக்குட்பட்டவர்கள். அடா புடாவென்று கத்திக்கொண்டும் தலைமுடியை முன்பின்னாகத் தூக்கிக் கடாசிக்கொண்டும் விபூதியை வாரி இறைத்துக்கொண்டும் தம்மை மறந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் பேச்சுரிமை மறுக்கப்பட்டவர்களாயிருக்குமோ என்று நினைத்தேன். சாமி உடனே கண்ணைக் குத்திவிடாதபடியால், நினைத்தது பிழையில்லை என்றும் உடனே நினைத்தேன். சின்ன வயசில் இவர்களையெல்லாம் நல்லதொரு டான்ஸ் டீச்சரிடம் சேர்த்து, பளபளவென்று அழைப்பிதழ் அடித்து முறைப்படி சலங்கை பூசை செய்யாதது அவரவர் தகப்பன்மார் தவறாயிருக்கக்கூடும்.</p>
<p>எனக்குத் தீராத வியப்பளித்த விஷயம் ஒன்றுதான்.</p>
<p>ஏகப்பட்ட க்ஷேத்திரங்களிலிருந்து வேலை மெனக்கெட்டு மதராசப்பட்டணத்தின் ஒரு குறிப்பிட்ட பேட்டையின் ஒரு குறிப்பிட்ட சந்திலுள்ள குறிப்பிட்ட அம்மன் கோயில் வாசலுக்கு அத்தனை அம்மன்கள் வருகிறார்களே, இந்த பூசாரியாகப்பட்டவரும் சரி, பக்தகோடிகளாகபட்டோரும் சரி, ஒரு திடுக்கிடல் காட்டமாட்டார்களோ? ஒரு பரவசம்? ஒரு கண்ணீர் மல்கல்? என்னவாவது ஒரு வேண்டுதல்? அட, ஒரு தெய்வம் நேரில் வந்தால் நாமெல்லாம் மைக் பிடித்து, ‘வா தாயி, வீட்ல என்ன விசேசம்?’ என்றா விசாரித்துக்கொண்டிருப்போம்? எத்தனை ஏபி நாகராஜன் படங்களில் பார்த்திருப்போம்? ஸ்டாப் ப்ளாக்கில் கடவுள் அல்லது அசரீரி தோன்றி மறையும்போதெல்லாம் கதாநாயக, நாயகிகள் எத்தனைப் பரவசமடைவார்கள்! நெக்குருகி, நெஞ்சுருகிப் புல்லரித்து, அரித்து, ரத்தக்கசிவு ஏற்படுமளவு ஆகிவிடுமே?</p>
<p>அதெல்லாம் பின்னே பொய்யா? உலகம் கந்தசாமிப் பிள்ளைகளால் மட்டுமே ஆனதா?</p>
<p>புதுமைப்பித்தனின் கந்தசாமி சாகவே மாட்டார் என்று உறுதிபடத் தோன்றியது. சாமி இருக்கிறவரை அந்த ஆசாமிக்கும் இருப்பிடம் உறுதி.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&amp;p=1326</wfw:commentRss>
		<slash:comments>20</slash:comments>
		</item>
		<item>
		<title>வேஷம்</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=1313</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=1313#comments</comments>
		<pubDate>Sat, 07 Aug 2010 09:49:09 +0000</pubDate>
		<dc:creator>para</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=1313</guid>
		<description><![CDATA[என் குழந்தையின் பள்ளிக்கூடத்தில் இன்று மாறுவேடப் போட்டி. பெற்றோருக்குக் கண்டிப்பாக அனுமதி இல்லை. வேஷம் போட்டு வாசலில் கொண்டு  விட்டுவிட வேண்டியது. முடிந்ததும் வந்து அழைத்துச் சென்றுவிட வேண்டும். பொதுவாக பள்ளி மாறுவேடப் போட்டிகளுக்கு ஒரு டச்சப் உதவியாளராகவாவது பெற்றோர் இருவரில் ஒருவர் அனுமதிக்கப்படுவதுதான் வழக்கம். இங்கே ஏதோ புதிய புரட்சி முயற்சி செய்து பார்க்கிறார்கள் போலிருக்கிறது. காலை எட்டரைக்குப் பள்ளி வாசலுக்குப் போய் நின்றேன். இதைவிட உன்னதமான ஒரு தினத்தை என் வாழ்நாளில் நான் அனுபவித்ததில்லை. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என் குழந்தையின் பள்ளிக்கூடத்தில் இன்று மாறுவேடப் போட்டி. பெற்றோருக்குக் கண்டிப்பாக அனுமதி இல்லை. வேஷம் போட்டு வாசலில் கொண்டு  விட்டுவிட வேண்டியது. முடிந்ததும் வந்து அழைத்துச் சென்றுவிட வேண்டும்.</p>
<p>பொதுவாக பள்ளி மாறுவேடப் போட்டிகளுக்கு ஒரு டச்சப் உதவியாளராகவாவது பெற்றோர் இருவரில் ஒருவர் அனுமதிக்கப்படுவதுதான் வழக்கம். இங்கே ஏதோ புதிய புரட்சி முயற்சி செய்து பார்க்கிறார்கள் போலிருக்கிறது.</p>
<p>காலை எட்டரைக்குப் பள்ளி வாசலுக்குப் போய் நின்றேன். இதைவிட உன்னதமான ஒரு தினத்தை என் வாழ்நாளில் நான் அனுபவித்ததில்லை. பலப்பல குழந்தைகள். பலவிதமான வெட்கங்கள். சிணுங்கல்கள், அழுகைகள், கெஞ்சல்கள். பயங்கள். பல்வேறு வேடங்கள். ஆறு பாரதியார். பன்னிரண்டு ஏஞ்சல்கள். ஒரு பரமசிவன். ஒரு ராமன். ஒரு காந்தி. ஏழெட்டு போலீஸ்காரர்கள். ஒரு மாகாளி பராசக்தி. ஒரு தெரெசா, ஒரு பகத் சிங். ஒரு விவேகானந்தர். விண்வெளிவீரர்கள் இரண்டு பேர். ஆதிசங்கரர் ஒருவர். [சங்கராசாரியார் என்று யாரோ பொத்தாம்பொதுவாகச் சொல்லிவைக்க, வளாகத்தில் சில வினாடிகள் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.] ஒரு பாதிரியார். இன்னும் முருகன் 2, பிள்ளையார் 1, அவ்வையார் 1, புலிவேஷம் இரண்டு.</p>
<p>வந்துகொண்டே இருந்தார்கள். வாசல்வரை சிரித்தபடி வந்துவிட்டு, பெற்றோரை விட்டுத் தனியாக உள்ளே போக [தினசரி போகும் பள்ளியே எனினும்] திடீரென்று மக்கர் செய்து அழுது ஆர்ப்பாட்டம் செய்த குழந்தைகள். கால் தடுக்கிறது, காது வலிக்கிறது. தலை அரிக்கிறது என்று வேஷத்தின் விளைவுகளால் பாதிப்புற்றுச் சிணுங்கிக்கொண்டிருந்த குழந்தைகள். கடைசிக் கணப் பரீட்சைப் படிப்புபோல் என்னென்னமோ பாடல்களை, சுலோகங்களை, கோஷங்களைப் பரபரப்பாக ஒப்பித்துப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகள்.</p>
<p>அவர்களைவிட சுவாரசியம், அவர்தம் அம்மாக்கள். என்ன பதற்றம், எத்தனை கவலைகள்! ஒழுங்கா சொல்லு. வாய்க்குள்ளயே முனகாதே. கண்ண கண்ண மூடாத. அரிச்சா கீழ வந்து சொறிஞ்சிக்கலாம். ஜட்ஜஸைப் பாத்ததும் முதல்ல வணக்கம் சொல்லிட்டு ஆரம்பிக்கணும். இயல்வது கரவேலுக்கு அப்பறம் ஈவது விலக்கேல். இக்கு அப்பறம் ஈ. அத ஞாபகம் வெச்சிக்கோ. மறந்துபோச்சுன்னா பேபேன்னு நிக்காம சட்னு வணக்கம் சொல்லிட்டு கீழ இறங்கிடு.</p>
<p>இந்தப் பெற்றோர் அனைவரும் அதிகாலை எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தங்கள் கலையுணர்வையும் கற்பனை வளத்தையும் தேடித்திரட்டித் தத்தம் குழந்தைகளின் மேனியில் விளையாடி எடுத்து வந்து காட்சிக்கு வைத்திருப்பவர்கள்.</p>
<p>ஒரு போலீஸ்காரக் குழந்தை உள்ளே போகவே மாட்டேன், தொப்பியைக் கழட்டினால்தான் ஆச்சு என்று ஆகாத்தியம் பண்ணிக்கொண்டிருந்தது. அதன் டாக்டர் தந்தையும் குஜராத்தி அன்னையும் தோப்புக்கரணம் போடாத குறையாக கெஞ்சிக்கொண்டிருந்தது பார்க்கத் தமாஷாக இருந்தது.</p>
<p>யாரோ யாரையோ கேட்டார்கள், ‘உங்க பொண்ணா, பையனா?’</p>
<p>‘பொண்ணு’</p>
<p>‘என்ன கெட்டப்?’</p>
<p>‘இந்திரா காந்தி’</p>
<p>‘பரவால்லிங்க. புதுசா இருக்கும்னு எங்க பையனுக்கு பாரதியார் வேஷம் போட்டு கூட்டிட்டு வந்தேன். இங்க பாத்தா பத்து பாரதியார். இது என்னத்த சொல்லி ப்ரைஸ் வாங்கப்போகுதோ.’</p>
<p>திடீரென்று யாரோ கிளப்பிவிட்டார்கள். யாரும் எதையும் பேசவோ, ஒப்பிக்கவோ, நடித்துக்காட்டவோ அனுமதி இல்லை. வெறுமனே வந்து நிற்க வேண்டும். பாடி லேங்குவேஜ் பார்ப்பார்கள். அவ்வளவுதான். நேரம் அதிகமில்லை.</p>
<p>‘ஐயோ எம்பையன் ஓடி விளையாடு பாப்பா ஃபுல்லா சொல்லப்போறானே.’</p>
<p>தின்னத்தகாத சின்னக்கவலைகளுடன் வெயிலில் வெளியே நின்றிருந்தவர்களும் சுவாரசியமளிக்கவே செய்தார்கள். போட்டி முடிந்ததும் குழந்தையைத் தானே வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவதாகவும் நான் வீட்டுக்குப் போகலாமென்றும் என் மனைவி உத்தரவு கொடுத்ததை அடுத்து, ஒரு முடிவுடன் வீட்டுக்கு விரைந்தேன்.</p>
<p>எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும். ஒரு பாரதியார் வேஷம் போட்டுப் பார்த்தாலென்ன?</p>
<p>சற்றும் எதிர்பாராமல் வந்த ஆசையில், குளிர் கோட்டைப் போட்டு, ஒரு பஞ்சகச்சம் முயற்சி செய்து, தலைப்பாகையும் தயார் செய்தாகிவிட்டது. பெரிய ஸ்டிக்கர் பொட்டும் கிடைத்துவிட்டது.</p>
<p>என்ன துரதிருஷ்டம். இந்தச் சமயம் பார்த்து மீசை இல்லாதுபோய்விட்டது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&amp;p=1313</wfw:commentRss>
		<slash:comments>16</slash:comments>
		</item>
		<item>
		<title>இட்லி உப்புமா 1</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=1309</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=1309#comments</comments>
		<pubDate>Wed, 04 Aug 2010 09:41:55 +0000</pubDate>
		<dc:creator>para</dc:creator>
				<category><![CDATA[சூரியக்கதிர் பத்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=1309</guid>
		<description><![CDATA[எனக்கு இட்லி உப்புமா ரொம்பப் பிடிக்கும். வெறும் இட்லி, வெறும் உப்புமாவில் ரசிக்கத்தக்க நூதனங்கள் ஏதும் கிடையாது. தொட்டுக்கொள்ளும் ஐட்டம் சரியாக இல்லாவிட்டால் எந்த மனுஷகுமாரனும் தின்னமாட்டான். ஒரு புதினா சட்னியோ, தக்காளி சட்னியோ, சாம்பாரோ, வேறு ஏதாவதோ இல்லாமல் இரண்டு வஸ்துக்களையும் வாயில் வைக்க முடியாது. இதுவே இட்லியை உதிர்த்துப் போட்டு உப்புமாவாக்கிப் பாருங்கள். வெந்த சமாசாரத்தை வாணலியில் இட்டு மிதமான சூட்டில் வதக்கும்போதே அதிலொரு நிறமும் மணமும் சேரத் தொடங்கும். பச்சை மிளகாய், கருவேப்பிலை, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எனக்கு இட்லி உப்புமா ரொம்பப் பிடிக்கும். வெறும் இட்லி, வெறும் உப்புமாவில் ரசிக்கத்தக்க நூதனங்கள் ஏதும் கிடையாது. தொட்டுக்கொள்ளும் ஐட்டம் சரியாக இல்லாவிட்டால் எந்த மனுஷகுமாரனும் தின்னமாட்டான். ஒரு புதினா சட்னியோ, தக்காளி சட்னியோ, சாம்பாரோ, வேறு ஏதாவதோ இல்லாமல் இரண்டு வஸ்துக்களையும் வாயில் வைக்க முடியாது.</p>
<p>இதுவே இட்லியை உதிர்த்துப் போட்டு உப்புமாவாக்கிப் பாருங்கள். வெந்த சமாசாரத்தை வாணலியில் இட்டு மிதமான சூட்டில் வதக்கும்போதே அதிலொரு நிறமும் மணமும் சேரத் தொடங்கும். பச்சை மிளகாய், கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் உளுத்தம்பருப்பு, கால் ஸ்பூன் பெருங்காயம் &#8211; போதும். நாலு ஸ்பூன் எண்ணெய். மேலும் கலையுள்ளம் மிச்சமிருந்தால் வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்பைக் கூட வறுத்துச் சேர்க்கலாம்.</p>
<p>இந்த அபாரமான சிற்றுண்டியைக் கண்டுபிடித்த பெண்மணி யாரென்று சொல்லாமல் செந்தமிழ்நாட்டுச் சரித்திரப் புஸ்தகங்கள் இருட்டடிப்பு பண்ணிவிட்டன. இந்த சரித்திரமே இப்படித்தான். நியாயமான பெருமையை, உரியவர்களுக்கு எப்போதும் சரியாகக் கொடுக்காது விட்டுவிடும். குறைந்தபட்சம் நாமாவது இட்லி உப்புமா சாப்பிடும்போதெல்லாம் அந்த அடையாளமில்லாத தமிழ்த்தாயை நினைத்துக்கொள்ளவேண்டும்.</p>
<p> <span id="more-1309"></span>
</p>
<p>எனக்குப் பாட்டியாக இருந்த ஸ்ரீமதி ரங்கநாயகி அம்மாள் என்பவர் அற்புதமாக அரிசி உப்புமா சமைப்பார். கசகசாவைக் கவிழ்த்த மாதிரி ஒன்றோடொன்று ஒட்டாமல் அது என்ன அப்படியொரு பதம் என்று வியந்து வியந்து தின்று தீர்த்திருக்கிறேன். பாட்டியாக இருந்தவருக்கு சமைக்கத்தான் தெரியுமே தவிர, கலைத்தொழில் நுட்பத்தை எடுத்து விவரிக்கத் தெரியாமல் போய்விட்டது. ஒருவேளை அது தொழில் தருமம் அல்லவென்று அவர் கருதியிருக்கலாம். இருட்டுக்கடை அல்வா ஃபார்முலா, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா ஃபார்முலா, திருப்பதி லட்டு ஃபார்முலா, தூத்துக்குடி மக்ரூன் ஃபார்முலா மாதிரி சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெரு ரங்கநாயகி அம்மாளின் அரிசி உப்புமா ஃபார்முலாவும் விசேடமானதே.</p>
<p>கி.பி. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் ஒன்றில் அவர் காலமானபிற்பாடு பல்வேறு நாரீமணிகள் சமைத்த பலவித உப்புமாக்களைச் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். உப்புமா அல்ல; உணவின்மீதே விரக்தி ஏற்பட்டு துறவு கொண்டோடிவிட வேண்டிய சூழல் வந்துவிடுமோ என்று கதிகலங்கும்படியாகவே அவை இருந்திருக்கின்றன. </p>
<p>ஹோட்டல்களில் கிச்சடி என்ற பெயரில் உப்புமாவுக்கும் பொங்கலுக்கும் ஏற்பட்ட கள்ள உறவின் விளைவாகப் பிறந்த குழந்தையாக ஒரு ஐட்டத்தை மிகத் தீவிரமாகப் பிரபலப்படுத்த ஆரம்பித்தார்கள். அதையும் முயற்சி செய்து பார்த்ததில், அது புழல் களிக்குப் புடைவை சுற்றிய மாதிரி இருந்தது. மேலுக்கு இரண்டு முந்திரிப் பருப்பைத் தூவிவிட்டால் சரியாப் போச்சா? தமிழன் நாவைத் தவறாக மதிப்பிட்டுவிட்டார்கள். விளைவு, ஒரு சில ஹோட்டல் ஊழியர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டதில், கிச்சடியாகப்பட்டது வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும் பட்ஜெட் தமிழ் சினிமாக்களை விடவுமே படுதோல்வி கண்ட ஐட்டம் எனத் தெரிந்துவிட்டது.</p>
<p>ரங்கநாயகி அம்மாளும் அற்புத அரிசி உப்புமாவும் என் வாழ்விலிருந்து விடைபெற்றுப் பல்லாண்டுகள் கழிந்த பிற்பாடு, தற்செயலாக ஒருநாள் ராஜலட்சுமி அம்மாள் என்கிற இன்னொரு நாரீமணியைச் சந்திக்க நேர்ந்தது. இவர் என் தகப்பனாருடைய சம்மந்தியின் மூன்றாவது மகளுடைய கணவருக்கு மாமியார் ஆவார்.</p>
<p>இவர்தான் சரித்திரத்தின் புதைபொருளான இட்லி உப்புமாவுக்குப் புத்துருவம் கொடுத்து எனக்கு அடையாளம் காட்டியவர். இட்லி உப்புமா என்பது, இட்லி மீந்தால் செய்வது என்னும் மூட நம்பிக்கையைத் தகர்த்து, இட்லி உப்புமாவுக்காகவே ஒரு குறிப்பிட்ட பதத்தில் மாவு அரைத்து, இட்லியாக்கி, ஆறவைத்து, உதிர்த்து, சிலபல சாமக்கிரியைகள் சேர்த்து, அதை ஒரு நட்சத்திர அந்தஸ்து சிற்றுண்டியாக எனக்கு மீள் அறிமுகப்படுத்தியவர்.</p>
<p>முன்பும் இட்லி உப்புமா சாப்பிட்டதுண்டு. என்றும் எங்கும் எப்போதும் கிடைக்கக்கூடிய எளிய சிற்றுண்டிதான். ஆனாலும் அதன் ஒரிஜினல் மணமும் குணமும் ருசியும் எல்லார் சமைப்பிலும் கூடாது. அதற்காக உங்கள் அத்தனை பேரையும் என் தகப்பனாருடைய சம்மந்தியின் மூன்றாவது மகளுடைய கணவரின் மாமியார் வீட்டுக்கு அழைத்துச் செல்வது இயலாத காரியம்.</p>
<p>ஒன்று செய்யலாம். நீங்களாகவே செய்யக்கூடியது. மதராசப்பட்டிணம் படத்துக்குப் போகலாம். அது ஒரு நல்ல இட்லி உப்புமா திரைப்படம். டைட்டானிக்கை இட்லியாகவும் காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பழம்படங்களை இதர சாமக்கிரியைகளாகவும் கொண்டு, ராஜலட்சுமி அம்மாளின் தொழில்நுட்பத் திறத்துக்குச் சற்றும் சளைக்காத திறமை கொண்ட இயக்குநரால் சமைக்கப்பட்டது. ஒரே ஒரு கூவக்கரை செட்டை வைத்துக்கொண்டு முழுப் பழைய சென்னையைச் சுற்றிக்காட்டிவிட்டது மாதிரி ஒரு தோற்ற மயக்கத்தைக் கொடுத்துவிடுகிறார் பாருங்கள், அதிலிருக்கிறது திறமை. முத்தையாவும் அசோகமித்திரனும் நல்லி செட்டியாரும் இதன்பொருட்டே சரித்திரத்தால் மறக்கடிக்கப்படப் போகிறார்கள். பின்னே? மேற்குறிப்பிட்ட பழஞ்சென்னை ஆய்வாளர்கள் வசம், துரதிருஷ்டவசமாக மேலே சொன்ன முந்திரிப்பருப்பு இல்லையே? மதராசப்பட்டிணத்தில் அது இருக்கிறது. எமி ஜாக்சன்!</p>
<p>படம் கிடக்கட்டும். எமி பற்றி உமி அளவாவது சொல்லவேண்டும். படம் பார்த்த நாளாக, இப்படியொரு லட்டுப் பெண்ணை எங்கிருந்து பிடித்து வந்தார்கள் என்று ஆச்சர்யம் தாங்கமாட்டாமல் இணையத்தில் அவரைப் பற்றிப் பிரதிதினம் மூன்றுவேளை தகவல் தேடிக்கொண்டிருந்தேன். கையிலே அவர் தாலியை வைத்துக்கொண்டு திரியாது இருந்தாலுமேகூட, இங்கிலாந்தில் உதித்த தமிழ் நிலவு போலத்தான் என் கண்களுக்குப் புலப்படுகிறார். பார்க்கிற, பேசுகிற, பழகுகிற அத்தனை பேரிடமும் எமி புராணம் பாடிக்கொண்டிருந்தேன்.</p>
<p>வெளிநாட்டுக்காரியாக இருந்தாலும் தமிழ்ப்பண்பாடு தலையுச்சியிலிருந்து கார்ப்பரேஷன் லாரித் தண்ணீர்போலக் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது என்று வியந்துகொண்டிருந்தேன். குஷ்புவுக்கு அடுத்து எமிக்கு இங்கே தேவாலயம் எழுப்ப எந்த இடம் சரியாக இருக்கும் என்று யாராவது ஆராயத் தொடங்கினால் தன்னார்வலனாகப் போய் உதவி செய்யவும் சித்தமாக இருந்தேன்.</p>
<p>விதி. எனக்கொரு சிநேகிதர் இருக்கிறார். ப்ரூனோ என்று பேர். அரசாங்க ஆசுபத்திரியில் டாக்டராக உத்தியோகம் பார்ப்பவர். என் எமி இம்சை பொறுக்காமல் ஒரு சுப தினத்தில் அவரது இணைய இல்லப் பக்கத்தின் சுட்டியைத் தேடிப்பிடித்து, ராட்சசனின் உயிரைப்போல் எனதுயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் ட்விட்டரில் போட்டு, பார் பார் பயாஸ்கோப் பார் என்றார்.</p>
<p>ஐயகோ! இதற்குமேல் என்ன எழுதுவேன்? எமி எமி எமி என்று நாமஜபம் செய்துகொண்டிருந்த்தற்குப் பரிகாரமாக இப்போது எமி எமி லாமா சபக்தானி என்று புலம்பும்படியாகிவிட்டது.</p>
<p>இட்லி உப்புமாவைக் கூட அதிகம் சாப்பிட்டால் சிலபல நூதன அவஸ்தைகள் உண்டென்று அறிவோமாக.</p>
<p><i>பிகு</i><i> 1: தேசநலன் கருதி எமியின் இணையப்பக்கத்தின் சுட்டியைத் தராது இருந்துவிடலாம் என்று தோன்றினாலும், தமிழர்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் என்கிற பேருண்மையும் தெரிந்தபடியால் அது <a href="http://www.amylouisejackson.com/" target="_blank">இங்கே.</a> </i></p>
<p><i>பிகு</i><i> 2: ஏலி ஏலி லாமா சபக்தானி என்பது ஒரிஜினல் வசனம். என் தேவனே, என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என்று பொருள். எம்பெருமான் இயேசுவின் சொற்கள் இவை.</i></p>
<p><em>[நன்றி: சூரியக்கதிர், ஆக 1-15]</em></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&amp;p=1309</wfw:commentRss>
		<slash:comments>15</slash:comments>
		</item>
		<item>
		<title>ஓர் அறிவிப்பு</title>
		<link>http://www.writerpara.com/paper/?p=1307</link>
		<comments>http://www.writerpara.com/paper/?p=1307#comments</comments>
		<pubDate>Mon, 26 Jul 2010 06:09:55 +0000</pubDate>
		<dc:creator>para</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://www.writerpara.com/paper/?p=1307</guid>
		<description><![CDATA[&#160; முன்போல் அடிக்கடி இங்கே எழுத முடிவதில்லை. வேலைகள் ஒரு பக்கம். ஆர்வக்குறைவு முக்கியம். எழுத்தைக் குறைத்து, கொஞ்சநாள் வெறுமனே படித்துக்கொண்டிருக்கலாம் என்று திட்டம். எனவே படிக்கிறேன். எழுதாதது பற்றிக் கடிதம் எழுதி விசாரிக்கும் நண்பர்கள் மன்னிக்கவும். திரும்பவும் வலையெழுத்தில் ஆர்வம் வரும்போது வருவேன். இந்தப் பதிவின் முக்கிய நோக்கம், இங்கே நான் எழுதிய பல பழைய கட்டுரைகளை இப்போது படித்துவிட்டு கமெண்ட் போடும் வாசகர்களைப் பற்றியது. கடந்த 10ம் தேதி பரிசோதனையாக ஒரு பத்தி எழுதியபோது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#160;</p>
<p>முன்போல் அடிக்கடி இங்கே எழுத முடிவதில்லை. வேலைகள் ஒரு பக்கம். ஆர்வக்குறைவு முக்கியம். எழுத்தைக் குறைத்து, கொஞ்சநாள் வெறுமனே படித்துக்கொண்டிருக்கலாம் என்று திட்டம். எனவே படிக்கிறேன்.</p>
<p>எழுதாதது பற்றிக் கடிதம் எழுதி விசாரிக்கும் நண்பர்கள் மன்னிக்கவும். திரும்பவும் வலையெழுத்தில் ஆர்வம் வரும்போது வருவேன். இந்தப் பதிவின் முக்கிய நோக்கம், இங்கே நான் எழுதிய பல பழைய கட்டுரைகளை இப்போது படித்துவிட்டு கமெண்ட் போடும் வாசகர்களைப் பற்றியது.</p>
<p>கடந்த 10ம் தேதி பரிசோதனையாக ஒரு பத்தி எழுதியபோது தளத்துக்கு வந்ததுடன் சரி. அதன்பின் இன்றுதான் எட்டிப்பார்க்கிறேன். பல பழைய கட்டுரைகளுக்கு வாசகர் கருத்துகள் வந்து காத்திருக்கின்றன. அவற்றை அனுமதிக்காமல் காலம் கடத்த நேர்ந்தது பற்றி வருந்துகிறேன். இப்போது அவை வெளியாகிவிட்டன. </p>
<p>அடுத்து திரும்ப எப்போது வருவேன் என்று தெரியவில்லை. எனவே கமெண்ட் எழுதுபவர்கள் அவை உடனுக்குடன் வெளியாகாதது பற்றி என்மீது வருத்தம் கொள்ள வேண்டாம். உடனே பதில் சொல்லியே தீரவேண்டுமென்றால் தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்புங்கள்.</p>
<p>சூரியக்கதிர் மாதமிருமுறை இதழில் விரைவில் ஒரு column தொடங்குகிறேன். அக்கட்டுரைகளை மட்டுமாவது இனி வலையில் வெளியிட முயற்சி செய்கிறேன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.writerpara.com/paper/?feed=rss2&amp;p=1307</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
	</channel>
</rss>
