சுகம் பிரம்மாஸ்மி – மீண்டும்

2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் சுகம் பிரம்மாஸ்மி என்றொரு தொடரை இத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன். ஆறு அத்தியாயங்கள் வரை எழுதினேன். பிறகு தொடர இயலாது போய்விட்டது. பல்வேறு பணி நெருக்கடிகள், கவனச் சிதறல்களே காரணம்.

இன்றைக்குச் சற்று நேரம் முன்பு என் நண்பர் ஒருவருடன் – அவர் ஒரு நல்ல நாத்திகர் – கடவுளைப் பற்றியும் சாதுக்கள் பற்றியும் தத்துவங்கள் பற்றியும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க நேர்ந்ததில், பாதியில் விட்ட இத்தொடரை மீண்டும் தொடரலாம் என்று தோன்றியது.

இதனைப் பல வாசகர்கள் மிகுந்த ஆர்வமுடன் வாசித்து வந்ததை நான் அறிவேன். தொடர்ந்து எழுதாததற்கு வருத்தம் தெரிவித்துப் பலபேர் மின்னஞ்சல் எழுதியிருந்தார்கள். முதல் அத்தியாயத்திலேயே நான் சொன்னதுபோல, இது திட்டமின்றி ஆரம்பித்த தொடர். அதனால்தான் பாதியில் நின்றது. இப்போதும் திட்டமின்றியே தொடர்கிறேன். எவ்வளவு போகிறதோ போகட்டும், அதன் இஷ்டத்துக்கு.

உங்களுக்கு மறந்திருந்தால், முதல் ஆறு அத்தியாயங்களை இங்கே வாசிக்கலாம்.

ஏழாவது அத்தியாயம் நாளை வரும்.

One Response - Add Yours+

  1. raviaa says:

    Thanks

Leave a Reply